விஸ்வரூபம் எடுக்கும் விவசாயி மரணம்  ; செங்கத்தில் குவிகிறது அதிரடிப்படை - உறவினர்கள் சாலைமறியல்...

 
Published : Oct 26, 2017, 08:41 PM ISTUpdated : Sep 19, 2018, 01:21 AM IST
விஸ்வரூபம் எடுக்கும் விவசாயி மரணம்  ; செங்கத்தில் குவிகிறது அதிரடிப்படை - உறவினர்கள் சாலைமறியல்...

சுருக்கம்

Village villagers are in the road blockade demanding action for the forest worker who was responsible for the death of the farmer Thirumalai near Thiruvannamalai

திருவண்ணாமலை அருகே விவசாயி திருமலையின் மரணத்துக்கு காரணமான வன ஊழியர்மீது நடவடிக்கை எடுக்க கோரி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அங்கு ஏராளமான அதிரடி படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். 

திருவண்ணாமலை மாவட்டம் மேல்புழுதிப்பூரில் வனத்துறையினர் தாக்கியதில் திருமலை என்பவர் உயிரிழந்ததாக புகார் தெரிவிக்கப்பட்டது. 
சந்தாகவுண்டன்புதூர் வனப்பகுதியில் மாட்டுவண்டியில் மணல் ஏற்றி வந்த திருமலை என்பவர் மர்மமாக இறந்து கிடந்தார்.

வனத்துறையினரால் திருமலை அடித்துக்கொல்லப்பட்டு இருக்கலாம் என்று உறவினர்கள் சந்தேகம் அடைந்தனர். இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் தாக்கியதில் வனத்துறை அதிகாரி தாண்டவராயன் படுகாயம் அடைந்தார்.

இதையடுத்து வனத்துறையினருக்கு சொந்தமான இருசக்கர வாகனங்களுக்கு பொதுமக்கள் தீ வைத்தனர். மேலும் வனத்துறையினரை பொதுமக்கள் தாக்கியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

அவர்களிடம் இருந்து போலீசார் தாண்டவராயனை மீட்டு அழைத்து சென்றனர். இதைதொடர்ந்து பொதுமக்கள் விவசாயி திருமலையின் மரணத்துக்கு காரணமான வன ஊழியர்மீது நடவடிக்கை எடுக்க கோரி சாலைமறியலில் ஈடுபட்டு வருகின்றனர். 

இதனால் அப்பகுதியில் ஏராளமான அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். 

PREV
click me!

Recommended Stories

நாளையே திமுக என்னை தூக்கிப்போட்டாலும் கவலையில்லை..! மதுரையில் 'கெத்து' காட்டிய திருமாவளவன்!
2026 புத்தாண்டு கொண்டாட்டம்.. தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு!