
தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிகழ்வாக, தமிழக முதல்வர் விஜய், அதிமுகவின் முக்கியத் தூண்களில் ஒருவரான முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தின் இல்லத்திற்கு நேரில் சென்றார். முதல்வரின் வருகையை முன்னிட்டு, அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி மற்றும் சி.வி.சண்முகம் ஆகியோர் நீண்ட நேரம் வாசலிலேயே காத்திருந்து அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். மலர்க்கொத்து கொடுத்து மரியாதையுடன் முதல்வரை வரவேற்ற இந்தத் தருணம், கட்சிப் பாகுபாடுகளைக் கடந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.