வைரமுத்துவை தவிர மற்ற யாரும் என் தலை முடியையும் தொட்டதில்லை... சின்மயி பகீர் பேச்சு

By vinoth kumarFirst Published Oct 13, 2018, 1:35 PM IST
Highlights

திரையிசைப் பாடலாசிரியர் வைரமுத்து தன்னிடம் தவறாக நடக்க முயற்சி செய்தார் என பாதிக்கப்பட்ட ஒரு பெண் பத்திரிக்கையாளர் ஒருவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்திருந்தார்.

திரையிசைப் பாடலாசிரியர் வைரமுத்து தன்னிடம் தவறாக நடக்க முயற்சி செய்தார் என பாதிக்கப்பட்ட ஒரு பெண் பத்திரிக்கையாளர் ஒருவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்திருந்தார். இதையடுத்து, தன்னிடம் வைரமுத்து, பாலியல் ரீதியாக தவறாக நடந்து கொண்டதாக பாடகி சின்மயி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். வைரமுத்து பற்றி எல்லாருக்கும் தெரியும்; நிறைய பாடகிகள் இதை அறிவார்கள். அவர் இப்படித்தான்; என்கிற பொருள்பட சின்மயி கருத்துப் பதிவிட்டிருந்தார்.

2004 ஆம் ஆண்டு சுவிட்சர்லாந்தில் நடந்த விழாவுக்குப் பிறகு, மற்ற அனைவரையும் அனுப்பிவிட்டு, என்னையும் என் அம்மாவையும் மட்டும் இருக்கச் சொன்னார்கள். பிறகு, வைரமுத்து தங்கியிருந்த ஹோட்டலுக்கு என்னை மட்டும் அழைத்தார்கள். அழைத்தவர்களின் வார்த்தைகளே நோக்கத்தைக் காட்டியதால் நான் மறுத்துவிட்டேன். பிறகு, அதற்காக மிரட்டும் தொனியிலும் வார்த்தைகளை எதிர்கொண்டேன் என தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்தார்.

அப்படி ஒரு சம்பவம் சுவிட்சர்லாந்தில் நடைபெறவில்லை என்று நிகர்ச்சியை ஏற்பாடு செய்திருந்த சுரேஷ் என்பவர் மறுத்திருந்தார். வைரமுத்துவின் விருப்பத்தின்பேரிலேயே அந்த நிகழ்ச்சிக்கு சின்மயி அழைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், சின்மயி-ன் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த வைரமுத்து, அண்மைக்காலமாக பிரபலங்கள் மீது செக்ஸ் புகார் கூறுவது நாகரீகமாகிவிட்டது என்று டுவிட்டரில் பதிவிட்டிருந்தார்.

  

இந்த விவகாரம் குறித்து புகார் கொடுத்தால், போலீசார் அதற்குரிய நடவடிக்கையை மேற்கொள்வார்கள் என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கூறியிருந்தார். இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய சின்மயி, வைரமுத்துவால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானது உண்மை தான் என்றும் இது அவருக்கே தெரியும் என்றும் வைரமுத்துவால் மறுக்க முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்திருந்தார்.

வைரமுத்துவைத் தவிர மற்ற யாரும் என் தலை முடியையை தொட்டதில்லை என்ற பொருள்படியும் அவர் கூறியிருந்தார். அடுத்தகட்டமாக வழக்கறிஞர்களுடன் ஆலோசித்து சட்ட ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்வேன் என்று சின்மயி கூறியிருந்தார்.

click me!