மத்திய அரசு தமிழகத்துக்கு துரோகம் செய்துள்ளது – வைகோ கண்டனம்

 
Published : Oct 18, 2016, 01:08 AM ISTUpdated : Sep 19, 2018, 01:39 AM IST
மத்திய அரசு தமிழகத்துக்கு துரோகம் செய்துள்ளது – வைகோ கண்டனம்

சுருக்கம்

வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைக்கு கயத்தாறில் ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறில் சுதந்திர போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ கலந்து கொண்டு, வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் பேசிய அவர்,
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் மத்திய அரசு தமிழகத்துக்கு துரோகம் செய்துள்ளது. இது  வன்மையாக கண்டிக்கத்தக்கது என தெரிவித்தார்.

மேலும், மக்கள் நல கூட்டணி சார்பில், மத்திய அரசை கண்டித்து தொடர் போராட்டம் நடத்தும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில், தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் விநாயகா ரமேஷ், மாநில இளைஞர் அணி ராஜேந்திரன், உள்பட மதிமுகவினர் பலர் கலந்து கொண்டனர்.

PREV
click me!

Recommended Stories

தவெக கூட்டத்தில் உணவு கிடையாது.. தண்ணீர் பாட்டில் மட்டும்தான்.. செங்கோட்டையன் விளக்கம்
தொடர் விடுமுறை.. சொந்த ஊர் போறீங்களா?.. போக்குவரத்துக்கழகம் சொன்ன குட்நியூஸ்..!