
WELCOME “மெத்தனால்”…BYE BYE “டீசல்”...விரைவில்....!
ஒருங்கிணைந்த கடல் நிர்வாகம் குறித்து,கோவாவில் நடைபெற்ற கருத்தரங்கில் மத்திய சாலை போக்குவரத்து நெடுஞ்சாலை மற்றும் கப்பல் துறை அமைச்சர் நிதின் கட்கரி கலந்துக்கொண்டார்.
இதில் பேசிய நிதின் கட்கரி,டீசலுக்கு பதிலாக சுற்றுசூழலை மாசு படுத்தாத மெத்தனாலை இனி பயன்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.
ரூ. 80 கோடி செலவு
நீர்வழி போக்குவரத்தை ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசு பல நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளார்.
பொதுவாகவே சாலைகள் அமைப்பதற்கு, அதுவும் ஒரு குறிப்பிட்ட தூரத்திற்கு மட்டுமே ரூ. 80 கோடி செலவு ஆகிறது. இதனால் இனி வரும் காலங்களில் நீர் வழி போக்குவரத்தையும் அதிகரிக்க வேண்டும் என்பதற்காக பல முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டு வருவதாகவும், அதற்காக பயன்படுத்தப் படும் கப்பல்களில் கூட உயிர் எரிபொருள் கொண்ட இன்ஜின்கள் பொருத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார் .
இதன் காரணமாக இனி வரும் காலங்களில் டீசலுக்கு பதிலாக மெத்தனால் பயன்படுத்தும் நிலை உருவாக வாய்ப்பு உள்ளது என்றே கூறலாம்