கார் மோதி 2 கல்லூரி மாணவிகள் உயிரிழப்பு...! - சாலையை கடக்கும்போது விபரீதம்...

 
Published : Oct 02, 2017, 09:34 PM ISTUpdated : Sep 19, 2018, 01:15 AM IST
 கார் மோதி 2 கல்லூரி மாணவிகள் உயிரிழப்பு...! - சாலையை கடக்கும்போது விபரீதம்...

சுருக்கம்

Two college students were killed in the accident when they tried to cross the road near Chirakanur in Trichy district.

திருச்சி மாவட்டம் சிறுகனூர் அருகே சாலையை கடக்க முயன்ற போது கார் மோதியதில் 2 கல்லூரி மாணவிகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

கீழப்பழூரை சேர்ந்தவர் மாணவி இலக்கியா மற்றும் திண்டுக்கல் மரியநாதபுரத்தை சேர்ந்தவர்  மாணவி சென்சியாராணி. 

இவர்கள் இருவரும் பெரம்பலூர் அருகே உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தனர். இதையடுத்து கடந்த 4 விடுமுறையை ஊரில் கழித்துவிட்டு இன்று மாலை மீண்டும் கல்லூரிக்கு திரும்பியுள்ளனர். 

இந்நிலையில், சிறுகனூர் அருகே இருவரும் சாலையை கடக்க முயன்றபோது மிக வேகமாக வந்த கார் மோதியதில், 2 மாணவிகளும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 

தகவலறிந்து வந்த போலீசார் இறந்த மாணவிகளின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

PREV
click me!

Recommended Stories

சீமானின் பேச்சை ரசித்து கேட்ட தொண்டரை கழுத்தை பிடித்து தள்ளிய நிர்வாகிகள்.. நாதக நிகழ்ச்சியில் பரபரப்பு..
டிடிவி, ஓபிஎஸ் உடன் கூட்டணி பேச்சு., அதிமுகவில் இருந்து பலரும் தவெக வருவார்கள்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி