செயற்கை மணல் தயாரித்த இருவர் கைது; ரகசிய தகவலின்பேரில் போலீஸ் உடனடி நடவடிக்கை...

Asianet News Tamil  
Published : May 09, 2018, 09:45 AM ISTUpdated : Sep 19, 2018, 02:20 AM IST
செயற்கை மணல் தயாரித்த இருவர் கைது; ரகசிய தகவலின்பேரில் போலீஸ் உடனடி நடவடிக்கை...

சுருக்கம்

Two arrested for making artificial sand immediate action by police

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் செயற்கை மணல் தயாரித்த இருவரை காவலாளர்கள் அதிரடியாக கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மோட்டார் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஅள்ளி அருகே மார்க்கண்டேய நதியில் மணலைத் தோண்டி எடுத்து, அவற்றின் மீது வேகமாக தண்ணீரை பீய்ச்சி அடித்து செயற்கை மணல் தயாரிக்கின்றனர் என்று வேப்பனஅள்ளி காவல் உதவி ஆய்வாளர் அறிவழகனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இந்த தகவலையடுத்து, அவரது தலைமையில் காவலாளர்க்கள், நிகழ்விடத்திற்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர். 

அப்போது, செயற்கை மணல் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தரணிசந்திரத்தைச் சேர்ந்த சக்கரப்பன் (49), ஐயப்பனப்பள்ளியைச் சேர்ந்த சதாசிவப்பன் (40) ஆகியோரை காவலாளர்கள் அதிரடியாக கைது செய்தனர். 

மேலும், செயற்கை மணல் தயாரிக்க பயன்படுத்திய மோட்டார் உள்ளிட்ட பொருள்களை காவலாளர்கள் பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து கைது செய்யப்பட்ட இருவரிடமும் தீவிர விசாரணை நடைப்பெற்று வருகிறது.
 

PREV
click me!

Recommended Stories

கமலும், நாங்களும் ஒன்றா..? திமுகவின் மத்தளத்தை உடைக்கும் கூட்டணி கட்சி..! ஸ்டாலின் ஷாக்..!
சென்னையில் நள்ளிரவு நடந்த பயங்கரம்.. பிரிந்து சென்ற மனைவி வீடு மீது 2 நாட்டு வெடிகுண்டுகள் வீசிய கொடூர காதல் கணவர்