நாளை பள்ளி கல்லூரிகள் செயல்படும் -  விடுமுறை கிடையாது

Asianet News Tamil  
Published : Jan 22, 2017, 07:00 PM ISTUpdated : Sep 19, 2018, 03:00 AM IST
நாளை பள்ளி கல்லூரிகள் செயல்படும் -  விடுமுறை கிடையாது

சுருக்கம்

நாளை பள்ளி கல்லூரிகள் செயல்படும் -  விடுமுறை கிடையாது

     தமிழகம் முழுவதும் கடந்த 15 ஆம் தேதி முதல்  ஜல்லிகட்டு  போட்டி நடத்த வலியுறுத்தி  பல்வேறு ஆர்ப்பாட்டங்கள்  போரட்டங்கள்  ரயில் மறியல், சாலைமறியல்  உண்ணாவிரதம் , உள்பட  பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இதனால் , மாநிலம் முழுவதும், பெரும் பரபரப்பும், பதற்றமும்   நிலவி வருகிறது

 

  ஜல்லிக்கட்டு போராட்டம்  தொடர்பாக  மாநிலத்தில் உள்ள , அனைத்து  அரசு மற்றும் தனியார்  பள்ளி கல்லூரிகளுக்கு  விடுமுறை  விடப்பட்டது. தமிழர்களின்  பாரம்பரிய  உணர்வு பூர்வமான , ஜல்லிக்கட்டு போட்டிக்கு  ஆதரவு தெரிவித்து , புதுவை  கேரளா, ஆந்திரா  கர்நாடகா , வட மாநிலங்கள்  மட்டுமின்றி    இலங்கை  மலேசியா தாய்லாந்து,  கனடா  துபாய்  உள்பட  பல்வேறு  நாடுகளும்  ஆதரவு  தெரிவித்து வருகின்றனர் .

 

இந்நிலையில் வரும்  பிப்ரவரி  மற்றும் மார்ச்  மாதங்களில்  பத்தாம்  வகுப்பு பண்ணி ரெண்டாம்   வகுப்பு மாணவ மாணவிகளுக்கு   அரசு பொதுத்தேர்வு  நடைபெற உள்ளது . இதனால்,  தற்போது  மாணவ  மாணவிகளுக்கு  விடுமுறை அளிக்கபட்டுள்ளதால்,  பாடங்கள் படிக்கவும்  செய்முறை பயிற்சி பெறவும்   சிரமம் ஏற்பட்டுள்ளது.  எனவே  நாளை  முதல் அனைத்து பள்ளி கல்லூரிகளும்  முழுநேரம்  செயல்படும் என  அரசு அறிவித்துள்ளது

 

PREV
click me!

Recommended Stories

ஒரே நேரத்தில் 13 அரசு ஊழியர்கள் வீடுகளில் கொள்ளை! வடமாநில குற்றவாளிக்கு சரியான ஆப்பு வைத்த கோவை போலீஸ்
'குடி'மகன்களுக்கு ஜாக்பாட்.. புத்தாண்டு ஸ்பெஷல்.. டாஸ்மாக் சொன்ன ஹேப்பி நியூஸ்!