மகிழ்ச்சி.. ! இன்று 11 மாவட்டங்களில் மழை.. எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ..? வானிலை அப்டேட்..

By Thanalakshmi VFirst Published Apr 28, 2022, 1:44 PM IST
Highlights

இன்று மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டியுள்ள 11 மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 

இதுக்குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,”வளி மண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும்‌ வெப்ப சலனம்‌ காரணமாக,

28.04.2022: சேலம்‌, நாமக்கல்‌, கிருஷ்ணகிரி, தர்மபுரி, ராமநாதபுரம்‌, தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்கள்‌, மேற்கு தொடர்ச்சி மலை பகுதி மாவட்டங்கள்‌ மற்றும்‌ அதனை ஓட்டிய ஈரோடு, கரூர்‌, திண்டுக்கல்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசான முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

29.04.2022: சேலம்‌, நாமக்கல்‌, கிருஷ்ணகிரி, தர்மபுரி, ராமநாதபுரம்‌, தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்கள்‌, மேற்கு தொடர்ச்சி மலை பகுதி மாவட்டங்கள்‌ மற்றும்‌ அதனை ஓட்டிய ஈரோடு, கரூர்‌, இண்டுக்கல்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ லேசான முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

30.04.2022. 01.05.2022: தென்‌ தமிழகம்‌ மற்றும்‌ வட உள்‌ தமிழக மாவட்டங்களில்‌ ஒரிரு இடங்களில்‌ லேசான முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

02.05.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ லேசான முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

சென்னையை பொறுத்தவரை:

அடுத்த 48 மணி நேரத்துற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பறிலை 28 டிகிரி செல்‌சியஸை ஓட்டி இருக்கக்கூடும்‌.

கடந்த 24 மணி நேரத்தில்‌ பதுவான மழை அளவு (சென்டிமீட்டரில்‌): ஏதுமில்லை.

மீனவர்களுக்கான எச்சரிக்கை : ஏதுமில்லை.

click me!