உஷார்.. உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப் பகுதி.. 7 மாவட்டங்களில் கனமழை..!

Published : May 03, 2022, 03:46 PM IST
உஷார்.. உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப் பகுதி.. 7 மாவட்டங்களில் கனமழை..!

சுருக்கம்

நாளை மறுநாள் கிருஷ்ணகிரி, சேலம்‌, நீலகிரி உள்ளிட்ட 7 மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் வரும் 6 ஆம் தேதி தெற்கு அந்தமான்‌ மற்றும்‌ அதனை ஓட்டியுள்ள பகுதிகளில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகிறது  என்று தெரிவித்துள்ளது.  

இதுக்குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில்,” தமிழக பகுதிகளின்‌ மேல்‌ நிலவும்‌ வளி மண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும்‌ வெப்ப சலனம்‌ காரணமாக,

03.05.2022: தென்‌ தமிழகம்‌, வட உள்‌ தமிழக மாவட்டங்கள்‌, காரைக்கால்‌, டெல்டா மாவட்டங்கள்‌ மற்றும்‌ அதனை ஓட்டிய (கடலூர்‌, அரியலூர்‌, திருச்சி, புதுக்கோட்டை) மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

04.05.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதஇுகளில்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

05.05.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர்‌, திருப்பத்தூர்‌, திருவண்ணாமலை, சேலம்‌, மற்றும்‌ நீலகிரி மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

06.05.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதஇுகளில்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

07.05.2022: டெல்டா மாவட்டங்கள்‌ மற்றும்‌ அதனை ஓட்டிய (கடலூர்‌, அரியலூர்‌, திருச்சி, புதுக்கோட்டை) மாவட்டங்கள்‌, காரைக்கால்‌, மேற்கு தொடர்ச்சிமலை மற்றும்‌ அதனை ஓட்டிய (ஈரோடு, கரூர்‌, மதுரை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, சேலம்‌, நாமக்கல்‌, தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில்‌ ஒரு சில இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

அதிகபட்ச வெப்பநிலை:

தமிழகத்தில்‌ அடுத்த இரண்டு நாட்களுக்கு ஓரிரு இடங்களில்‌ அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து 2 -3 டிகிரி செல்‌சியஸ்‌ அஇகமாக இருக்கக்கூடும்‌.

சென்னையை பொறுத்தவரை:

அடுத்த 48 மணி நேரத்துற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்‌சியஸை ஓட்டி இருக்கக்கூடும்‌.

மீனவர்களுக்கான எச்சரிக்கை :

நாளை (04.05.2022) தெற்கு அந்தமான்‌ மற்றும்‌ அதனை ஓட்டியுள்ள பகுதிகளில்‌ ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகக்கூடும்‌. இதன்‌ காரணமாக இப்பகுதிகளில்‌ வரும் 6 ஆம் தேதி ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும்‌ இதன்‌ காரணமாக

03.05.2022: தெற்கு அந்தமான்‌ கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளி காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்துலும்‌ இடையிடையே 60 கிலோ மீட்டர்‌ வேகத்துலும்‌ வீசக்கூடும்‌.

04.05.2022: அந்தமான்‌ கடல்‌ மற்றும்‌ அதனை ஓட்டிய தென்கிழக்கு வங்க கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளி காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்துலும்‌ இடையிடையே 6௦ கிலோ மீட்டர்‌ வேகத்துலும்‌ வீசக்கூடும்‌.

05.05.2022: அந்தமான்‌ கடல்‌ மற்றும்‌ அதனை ஓட்டிய தென்கிழக்கு வங்க கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளி காற்று மணிக்கு 45 முதல்‌ 55 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ இடையிடையே 65 கிலோ மீட்டர் வீசக்கூடும்‌.

06.05.2022: அந்தமான்‌ கடல்‌, தென்கிழக்கு வங்க கடல்‌ மற்றும்‌ அதனை ஓட்டிய மத்திய கிழக்கு வங்க கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளி காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ இடையிடையே 70 கிலோ மீட்டர்‌ வேகத்திலும் வீசக்கூடும்‌.

07.05.2022: வடக்கு அந்தமான்‌ கடல்‌ மற்றும்‌ தென்ழக்கு வங்க கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளி காற்று மணிக்கு 60 முதல்‌ 70 கிலோ மீட்டர்‌
வேகத்திலும்‌ இடையிடையே 80 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌ தெற்கு அந்தமான்‌ கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளி காற்று மணிக்கு 50 முதல்‌ 60 கிலோ மீட்டர்‌ வேகத்துலும்‌ இடையிடையே 70 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌

மேற்குறிப்பிட்ட நாளில்‌ மீனவர்கள்‌ இப்பகுதஇகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்‌.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

வ.உ.சிக்கு திமுக என்ன செய்தது.. எத்தனை இடத்தில் பெயர் வைத்தது? திருச்சி சிவாவுக்கு வ.உ.சி பேத்தி அதிரடி கேள்வி
கலைஞருக்கு பாரத ரத்னா விருது வேண்டும்.. மக்களவையில் தமிழச்சி தங்கப்பாண்டியன் கோரிக்கை