வடமாநிலம் போல பிரச்சினை உருவாக்க நினைக்கிறீங்களா? அண்ணாமலை, எச்.ராஜாவுக்கு வார்னிங் கொடுக்கும் சேகர்பாபு!

Published : Feb 05, 2025, 02:44 PM IST
வடமாநிலம் போல பிரச்சினை உருவாக்க நினைக்கிறீங்களா? அண்ணாமலை, எச்.ராஜாவுக்கு வார்னிங் கொடுக்கும் சேகர்பாபு!

சுருக்கம்

சென்னை ஓட்டேரி படவேட்டம்மன் கோவில் திருப்பணிகளை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார். மார்ச் 3ம் தேதி குடமுழுக்கு நடைபெறும் என்றும், திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவுப்படி அரசு செயல்படும் என்றும் தெரிவித்தார்.

சென்னை ஓட்டேரி அருள்மிகு படவேட்டம்மன் திருக்கோவில் இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர்  சேகர்பாபு திருக்கோவில் நடைபெற்று வரும் திருப்பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதனையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் சேகர்பாபு: இந்த  ஆட்சி பொறுப்பேற்ற பிறகு பக்தர்களின் தேவைகளை நிறைவேற்றும் பணிகள் மற்றும் பொதுமக்கள், பக்தர்களின் அனைத்தும் தேவையும் நிறைவேற்றி முதன்மையான  திமுக அரசு திகழ்கிறது.

இதுவரை 2504 திருக்கோவில்களுக்கு குடமுழுக்கும், 1000 ஆண்டுகளுக்கு மேலான 49 திருக்கோயில்களின் குடமுழுக்கு நடைபெற்றுள்ளது. ஆதி படவேட்டம்மன் திருக்கோயில் குடமுழுக்கு வருகிற மார்ச் மாதம் 3ம் தேதி நடைபெற உள்ளது. இதுவரை 7,154 கோடி மதிப்பிலான கோவில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளது. இந்தாண்டு இறுதிக்குள்  3000த்திற்கும் மேற்பட்ட கோயில்களின் குடமுழுக்கு நடைபெற உள்ளது என தெரிவித்தார். 

திருப்பரங்குன்றம்  போராட்டத்தில் ஈடுபட்டவர்களை இந்து அமைப்பினர் என குறிப்பிட வேண்டாம் பாஜகவினர் என்று தான் குறிப்பிடுவேன். இந்த ஆட்சிக்கு ஒரு அபாயத்தை ஏற்படுத்த வேண்டும் என்று நினைக்கிறார்கள். நேற்றைய போராட்டம் ஒரு தேவையற்ற போராட்டம். அந்த பகுதியில் உள்ள இஸ்லாமியர்கள், இந்துக்கள் போன்ற மக்களே தேவையற்ற ஒரு பிரச்சனை என்று கூறியிருக்கிறார்கள்.

அண்ணாமலை மற்றும் எச். ராஜாவிற்கு ஒன்று சொல்லிக் கொள்கிறோம்.  எங்கள் முதல்வர் எங்களை அமைதியாக இருக்க அறிவுறுத்தி இருக்கிறார். வட மாநிலத்தைப் போன்று கலவரத்தை ஏற்படுத்த நினைக்கிறீர்கள். எங்கள் முதல்வர் எங்கு கலவரம் ஏற்பட்டாலும் இரும்பு கரம் கொண்டு அடக்க தயாராக இருக்கிறார். பெரியார் மண்ணில் திராவிட மண்ணில் இது போன்ற நிகழ்வுகள் நடைபெருவதற்கு ஒரு காலமும் முதலமைச்சர் அனுமதிக்கப்பட்டார்.

திருப்பரங்குன்றத்தில் இஸ்லாமியர் இந்துக்களும் மாமா மச்சானாக சகோதரத்துவம் கொண்டு வாழ்ந்து வருகிறார்கள். திருப்பரங்குன்றம் போன்ற கோயில் பிரச்சனையை எடுத்ததால் பாஜகவுக்கு பூஜ்ஜிய வாக்கு சதவீதம் கூட கிடைக்கப்போவதில்லை. இதை வைத்து அரசியல் ஆக்க வேண்டாம். திருப்பரங்குன்றம் விவகாரத்தை வைத்து அரசியல் குளிர்காய நினைக்கிறார்கள். அண்ணாமலை, ஹெச்.ராஜா ஆகியோர் வட மாநிலம் போல இங்கே பிரச்சினையை உருவாக்க நினைக்கிறார்கள். திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் தமிழ்நாடு அரசு செயல்படும் என அமைச்சர் சேகர் பாபு கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

தனி நீதிபதி உத்தரவால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை.. உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு!
நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு அப்பாற்பட்டதா திமுக அரசு? விளாசும் இபிஎஸ்