
கணவா் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் கேட்ட மனைவி 13 மாத குழந்தையை கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார்.
வேலூர் மாவட்டம் காட்பாடியை அடுத்த செங்குட்டை பகுதியை சேர்ந்த தம்பதியினர் ரெக்ஸ் – கிறிஸ்டியானா. இவர்களுக்கு 13 மாத குழந்தை ஒன்று உள்ளது.
இந்நிலையில் கணவர் ரெக்ஸ் தற்கொலை செய்து கொண்டதாக மனைவி கிறிஸ்டியானாவுக்கு தகவல் வந்துள்ளது.
இதை கேட்டு அதிர்ச்சியடைந்த கிரிஸ்டியனா தனது 13 மாத குழந்தையை கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலறிந்து வந்த போலீசார் தாய் மற்றும் குழந்தையின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் கணவர் ரெக்ஸ் தற்கொலை செய்து கொண்டது உண்மையா என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.