பள்ளி சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து மாணவி பலி…!!! உறவினர்கள் போராட்டம்…

Asianet News Tamil  
Published : Jun 27, 2017, 04:18 PM ISTUpdated : Sep 19, 2018, 12:48 AM IST
பள்ளி சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து மாணவி பலி…!!! உறவினர்கள் போராட்டம்…

சுருக்கம்

The school environment fell down one student caused to death

மதுரை அருகே பள்ளி சுற்றுச்சுவர் மீது தண்ணீர் லாரி மோதிய விபத்தில் மாணவி ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஜி.எஸ்.டி சாலையில் அரசு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி ஒன்று உள்ளது. இங்கு மதிய உணவு இடைவேளையின் போது பெற்றோர்கள் குழந்தைகளுக்கு உணவு வழங்கி கொண்டிருந்தனர்.

அப்போது Uள்ளிக்கு தண்ணீர் கொண்டு வந்த லாரி பள்ளி காம்பவுன்ட சுவர் மீது பின் பக்கமாக மோதியது. இதில் அருகில் உணவருந்தி கொண்டிருந்த பவித்ரா(7), அனுசியா(7),  அனுசியாவின் தாயார் பவானி (29) ஆகியோர் படுகாயமடைந்தனர்.

இதையடுத்து மூன்று பேரும் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் பவித்ரா என்ற மாணவி மருத்துவமனை செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.

இந்நிலையில் இதனை கண்டித்து பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் சாலை மறியல் போரட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

99% வாக்குறுதி நிறைவேற்றமா..? மனசாட்சியே இல்லாம பொய் பேசலாமா முதல்வரே..? விளாசும் அன்புமணி
12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு.. வெளியான முக்கிய அறிவிப்பு!