காவல்நிலைய பின்புற வீட்டில் 50 சவரன் நகை கொள்ளை - நெல்லையில் துணிகரம்...

 
Published : Jul 27, 2017, 09:03 AM ISTUpdated : Sep 19, 2018, 12:56 AM IST
காவல்நிலைய பின்புற வீட்டில் 50 சவரன் நகை கொள்ளை - நெல்லையில் துணிகரம்...

சுருக்கம்

The rescued government official behind the police station at Tirunelveli Palayangadu broke the door of the house and robbed the 50 shawl jewelry by the mysterious people.

திருநெல்வேலி பாளையங்கோட்டையில் காவல்நிலையத்தின் பின்புறம் உள்ள ஒய்வு பெற்ற அரசு அதிகாரி வீட்டின் கதவை உடைத்து 50 சவரன் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

திருநெல்வேலி பாளையங்கோட்டையில் தெற்கு பஜாரில் அரசு அதிகாரி ஒருவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று உறவினரின் விழா நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு இன்று காலை வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் பின்பக்க பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியுற்றார்.

உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 50 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

அதில், தெற்கு பஜாரில் உள்ள அரசு ஊழியரின் வீட்டின் பால்கனி வழியாக மர்ம நபர்கள் நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர் என்பது தெரியவந்தது.

 

PREV
click me!

Recommended Stories

எப்போதும் திமுக எதிர்ப்பு திமுக வெறுப்பு, திமுக = விஜய் எதிர்ப்பு என்ற நிலை தான் இருக்கிறது
Tamil News Live today 21 December 2025: ஒருத்தர விடல; வீடு புகுந்து எல்லோரையும் தூக்கிய போலீஸ் - பாக்கியத்தின் ரிவெஞ்ச் ஸ்டார்ட்! பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அதிரடி புரோமோ!