சுகாதாரத்துறையில் வெளியாகும் அம்பலங்கள் - ஊழியரிடமே பண மோசடி செய்த ஆய்வாளர்...!

 
Published : Sep 22, 2017, 02:51 PM ISTUpdated : Sep 19, 2018, 01:12 AM IST
சுகாதாரத்துறையில் வெளியாகும் அம்பலங்கள் - ஊழியரிடமே பண மோசடி செய்த ஆய்வாளர்...!

சுருக்கம்

The police arrested a health inspector who allegedly cheated several lakh rupees by claiming land in Sleeper Sector employee.

சேலத்தில் சுகாரத்துறை ஊழியரிடம் நிலம் வாங்கித் தருவதாகக் கூறி பல லட்சம் ரூபாய் மோசடி செய்த சுகாதாரத்துறை ஆய்வாளரை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சேலத்தில் சுகாதாரத்துறை ஊழியராக பணிபுரிபவர் பூங்கொடி. இவரிடம் சுகாதாரத்துறை ஆய்வாளராக பணிபுரியும் வெங்கடாச்சலமும் அவரது மனைவி யசோதாவும் நிலம் வாங்கித் தருவதாகக் கூறி பல லட்சம் ரூபாய் வாங்கியுள்ளனர். 

ஆனால் பணம் வாங்கி நீண்ட நாட்கள் ஆகியும் நிலம் வாங்கிக் கொடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பூங்கொடி வெங்கடாசலத்திடம் பலமுறை இதுகுறித்து கேட்டும் அவர் சரியான பதில் தரவில்லை. 

இதையடுத்து, பூங்கொடி மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். அவர் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து வெங்கடாசலத்தை கைது செய்தனர். 

ஆனால் வெங்கடாசலத்தின் மனைவி யசோதா தலைமறைவகிவிட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

மோட்டர் போட்டு ரெடியா வச்சுக்கோங்க.. விழுப்புரம் மாவட்டத்தில் இன்று எந்தெந்த பகுதிகளில் மின்தடை!
குஷியில் துள்ளிக்குதித்து ஆட்டம் போடும் பள்ளி, கல்லூரி மாணவர்கள்.! கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு டிசம்பர் 24ம் விடுமுறை!