2 குழந்தைகள் கொன்ற அபிராமிக்கு என்ன தண்டனை கிடைக்கப்போகிறது தெரியுமா..?

By thenmozhi gFirst Published Sep 12, 2018, 1:56 PM IST
Highlights

கள்ளக் காதலுக்காக பெற்ற குழந்தைகளை ஈடு இறக்கம் இல்லாமல் கொலை செய்த அபிராமி மற்றும் அவரது கள்ளக்காதலுக்கு என்ன தண்டனை கிடைக்கும் என தற்போது விவரம் வெளிவர தொடங்கி உள்ளது.
 

கள்ளக் காதலுக்காக பெற்ற குழந்தைகளை ஈடு இறக்கம் இல்லாமல் கொலை செய்த அபிராமி மற்றும் அவரது கள்ளக்காதலுக்கு என்ன தண்டனை கிடைக்கும் என தற்போது விவரம் வெளிவர தொடங்கி உள்ளது.

கள்ளக்காதலுகாக இரண்டு குழந்தைகளை விஷம் கொடுத்தே கொன்றே தாய் அபிராமியின் மிகவும் கேவலமான செயல் தமிழகம் முழுவதும் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது 

இந்நிலையில் இவர்களுக்கு அதிகபட்சமாக இந்திய அரசியல் சாசன சட்டத்தின்படி மரண தண்டனை வழங்கப்படலாம் என  தெரியவந்து உள்ளது. அதே சமயத்தில் மரண தண்டனை என்பது, இந்தியாவில்  பெரும்பாலான கட்சிகள் மற்றும் மக்கள் மரண தண்டனைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருவதால், அது ஒரு சர்ச்சையாகவே உள்ளது. 

மேலும் அபிராமியின்  இந்த செயலுக்கும் அதற்கு உடந்தையாக இருந்த கள்ளக்காதலர் இவர்கள் இருவர் மீதும் இரட்டை கொலை செய்தது, தடயங்களை அழிக்க முயற்சி செய்தது போன்ற பல்வேறு வழக்குகளின் கீழ் குற்றம் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

அதன் வேளையில், அபிராமி திட்டமிட்டு தான் இந்த செயலை செய்து உள்ளார் என்பதால், அபிராமி மற்றும் சுந்தரம் இவர்கள் இருவருக்கும் அதிகபட்சமாக ஆயுள் தண்டனை கிடைக்கலாம். இதற்கு அடுத்தப்படியாக  மரண தண்டனை விதிக்கப்பட்டால் அது ஜனாதிபதியின் பார்வைக்கு எடுத்து செல்லப்படும் என தெரிகிறது 

பொதுவாகவே தற்போது இந்தியாவில் மரண தண்டனைக்கு பல அரசியல் கட்சிகள் மட்டுமின்று மனித உரிமை கழகங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதால் அபிராமி மற்றும் சுந்தரத்திற்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்க வாய்ப்பு உள்ளது என்ற தகவல் வெளியாகி உள்ளது 

click me!