Tamilnadu Rain : அச்சச்சோ ! மீண்டும் உருவாகும் ‘புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி’ ; மக்களே உஷார்..

Published : Dec 18, 2021, 07:36 AM IST
Tamilnadu Rain : அச்சச்சோ ! மீண்டும் உருவாகும் ‘புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி’ ; மக்களே உஷார்..

சுருக்கம்

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வடகிழக்கு பருவக் காற்று காரணமாக இன்று (18-ம் தேதி) தென் கடலோர மாவட்டங்கள், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிருஇடங்களில் லேசான அல்லது மிதமான மழை பெய்யக் கூடும்.

நாளை (19-ம் தேதி)  வடகடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக் கூடும். தென்கிழக்கு வங்க கடல் மற்றும்அதனை ஒட்டிய பூமத்திய ரேகை பகுதியில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும். 

இதன் காரணமாக 18, 19-ம் தேதிகளில் தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 60 கிமீ வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக் கூடும். 20-ம் தேதி தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடல் பகுதிகளில் மணிக்கு 45 முதல் 65 கிமீ வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக் கூடும். இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்’ என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்து  உள்ளது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

தமிழகத்தில் குழந்தைகளுக்கும் எளிதாக கிடைக்கும் போதைப் பொருகள்.. வேதனையை கொட்டும் அன்புமணி
இனி உதயநிதி செங்கல்லை தூக்க முடியாது..! வெளியானது மதுரை AIIMS இன் அட்டகாசமான புகைப்படங்கள்