
வானிலை ஆய்வு மையம் :
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் செந்தாமரை கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில், 'தமிழகம் மற்றும் புதுச்சேரியில், இன்று பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும். தமிழக உள் மாவட்டங்களில், இன்றும், நாளையும், அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 டிகிரி செல்ஷியஸ் வரை அதிகரிக்கும்.
பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் மற்றும் தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், அடுத்த மூன்று நாட்களுக்கு, சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.
அதிகபட்ச வெப்பநிலை :
தென்காசி, துாத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில், நாளை முதல் மூன்று நாட்களும், தேனியில் நாளையும், 18ம் தேதியும்; நீலகிரியில், 18ம் தேதியும் மிதமான மழை பெய்யும். மீனவர்களுக்கு எச்சரிக்கை ஏதுமில்லை.
அடுத்த இரண்டு நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 டிகிரி செல்சியஸ் முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கக்கூடும் எனவும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.