கோயில் பூசாரி வீட்டில் நகை, பணம் கொள்ளை - மர்ம நபர்கள் கைவரிசை...!

Asianet News Tamil  
Published : Oct 22, 2017, 01:40 PM ISTUpdated : Sep 19, 2018, 01:20 AM IST
கோயில் பூசாரி வீட்டில் நகை, பணம் கொள்ளை - மர்ம நபர்கள் கைவரிசை...!

சுருக்கம்

The incident took place in the house of the temple priest near Kancheepuram and the looting of jewelery and jewelery.

காஞ்சிபுரம் அருகே கோயில் பூசாரி வீட்டில் நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

காஞ்சிபுரத்தை அடுத்த ஆர்பாக்கத்தில் கோயில் பூசாரியாக இருப்பவர் சந்தான கிருஷ்ணன். இவர் தினமும் காலையில் கோயிலுக்கு சென்று பூஜையை முடித்து விட்டு மதியம் வீடு திரும்புவது  வழக்கம். 

வழக்கம்போல் இன்றும் காலை வீட்டை பூட்டிவிட்டு கோயிலுக்கு சென்றுள்ளார். பின்னர், வீடு திரும்பியபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியுற்றார். 

உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 25 சவரன் நகை, 1 லட்சம் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது. 

இதையடுத்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார்  இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

PREV
click me!

Recommended Stories

CM Vijay: இம்மாத இறுதியில் டெல்லி செல்லும் முதல்வர் விஜய்..! பிரதமருடன் முக்கிய சந்திப்பு..
“திசை திருப்பும் அரசியல் செய்யாதீங்க” ஆதவ் அர்ஜூனாவுக்கு சிவசங்கர் கடும் எச்சரிக்கை!