நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் முறைகேடு - சி.பி.ஐ முன்னாள் இயக்குனர் மீது வழக்கு 

 
Published : Apr 25, 2017, 06:57 PM ISTUpdated : Sep 19, 2018, 03:12 AM IST
 நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் முறைகேடு - சி.பி.ஐ முன்னாள் இயக்குனர் மீது வழக்கு 

சுருக்கம்

the fraudcast on Central Bureau of Investigation ex. director ranjith sinka

நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் முறைகேடு செய்திருப்பதாக மத்திய புலனாய்வு அமைப்பின் முன்னாள் இயக்குனர் ரஞ்சித் சின்ஹா மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு மற்றும் நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல் வழக்குகளில் தொடர்புடையவர்கள் சி.பி.ஐ. இயக்குனர் ரஞ்சித் சின்ஹாவை பலமுறை அவரது வீட்டில் சந்தித்ததாக புகார் எழுந்தது. 
இதற்கு ஆதாரமாக சி.பி.ஐ. இயக்குநர் இல்லத்தின் வருகைப் பதிவேடும் உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. அதில் நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல் வழக்குகளில் தொடர்புடையவர்கள் ரஞ்சித் சின்ஹாவை சந்தித்து பேசிய ஆதாரங்கள் இருந்தன.
இதையடுத்து நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு ஊழல் வழக்கில் சிபிஐ முன்னாள் இயக்குநர் ரஞ்சித் சின்ஹா மீதான புகார் குறித்து விசாரிக்க சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் முறைகேடு செய்திருப்பதாக மத்திய புலனாய்வு அமைப்பின் முன்னாள் இயக்குனர் ரஞ்சித் சின்ஹா மீது மீண்டும் ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

PREV
click me!

Recommended Stories

பக்தர்களுக்கு ஷாக்கிங் நியூஸ்! பழனி முருகன் கோவில் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
தமிழ்நாட்டிற்கு தனி கேரக்டர் உள்ளது..! பீகார் மாதிரி இல்லை.. அமித்ஷாவுக்கு உதயநிதி சொன்ன ஸ்ட்ராங் மெசேஜ்