
ஊழலில் திளைக்கும் துறையாக பத்திரப்பதிவுத்துறை உள்ளது என்றும் லஞ்சம் இல்லாமல் சார்-பதிவாளர் அலுவலகங்களில் எதுவும் நடக்காது என்ற நிலை உள்ளது என்றும் நீதிபதி கிருபாகரன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தப்படுகிறதா எனவும் கடந்த 10 ஆண்டுகளில் நடத்தப்பட்ட சோதனைகள் எத்தனை எனவும் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
சோதனையில் எத்தனை பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
மேலும் டிசம்பர் 4-ம் தேதிக்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கும் மற்றும் டிஜிபி-க்கும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.