பெற்ற மகளையே 5 வருஷமா பாலியல் பலாத்காரம் செய்துவந்த தந்தை! கடன் தராததால் குழந்தைகளை தூக்கி சென்ற மகளீர் குழு!

 
Published : Feb 09, 2018, 12:25 PM ISTUpdated : Sep 19, 2018, 01:56 AM IST
பெற்ற மகளையே 5 வருஷமா பாலியல் பலாத்காரம் செய்துவந்த தந்தை! கடன் தராததால் குழந்தைகளை தூக்கி சென்ற மகளீர் குழு!

சுருக்கம்

The daughter who has been raped for 5 years

கரூரில் தாயின் புகாரால் ஐந்து ஆண்டுகளாக மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துவந்த தந்தையிடமிருந்து மகளை மீட்டு தந்தைய காவலாளர்கள் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம், டி.கூடலூர் கட்டையம் குளத்துப்பட்டியைச் சேர்ந்தவர் ஜெயபாலன், டெய்லர். இவருக்கும் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அடுத்த புளியம்பட்டியைச் சேர்ந்த செல்வமணிக்கும் திருமணமாகி 14 வயதில் மகளும், 7 வயதில் மகனும் உள்ளனர். இவர்கள் கரூர் செங்குந்தபுரத்தில் குடும்த்தோடு வசித்து வந்தனர். இந்த நிலையில் கணவன், மனைவியிடையே கருத்துவேறுபாட்டால் கடந்த ஐந்து ஆண்டுகளாக அதே பகுதியில் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

அப்போது மகள் தந்தையுடனும், மகன் தாயுடனும் தனித்து வசித்தனர். இந்த நிலையில் தனது மகளுக்கு கணவர் கடந்த ஐந்து ஆண்டுகளாக பாலியல் தொல்லை கொடுத்து வருகிறார் என்று தாய் செல்வமணி நேற்று கரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.

இதனைத்  தொடர்ந்து காவலாளார்கள் ஜெயபாலனை போக்சோ சட்டம் அதாவது குழந்தைகளை பாலியல் வன்கொடுமையில் இருந்து தடுக்கும் சட்டத்தின் கீழ் கைது செய்தனர். அவர், உடனே சிறையிலும் அடைக்கப்பட்டார். இதுகுறித்து அவரது மகளை பரிசோதனைக்காக அரசு மருத்துவமனிக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
கல்யாண வீட்டில் செருப்பு திருடியவரை கொன்ற மாப்பிள்ளை...

உத்தரப்பிரதேசம் மாநிலம் படான் மாவட்டம் சுராஜ்பூர் கிராமத்தைச் சேர்ந்த சுரேந்திரா என்ற வாலிபரின் திருமண நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியின் முடிவில் மணமகனின் செருப்பு காணாமல் போனது. மணமகனின் நண்பர்கள் தேடியும் செருப்பு கிடைக்கவில்லை. அவர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ராம்சரண் என்பவரை சந்தேகத்தின் பெயரில் விசாரித்தனர். அப்போது மணமகன் அவர் நண்பர்களுடன் இணைந்து ராம்சரணை கொடூரமாக தாக்கினார்.

இதில் படுகாயமடைந்த ராம்சரண் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக பலியானார். இது குறித்து ராம்சரணின் மனைவி போலீசில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் சுரேந்திரா மற்றும் அவரது நண்பர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கடன் தராததால் குழந்தைகளை தூக்கி சென்ற பெண்கள் டீம்!

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையை அடுத்த கொம்புகாரனேந்தல் பகுதியை சேர்ந்தவர் கணேசன். இவர் கோவையில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி கொங்கேசுவரி. இவர்களுக்கு கதிர்வேல், பிரியங்கா ஆகிய 2 குழந்தைகள் உள்ளனர். கொங்கேசுவரி அப்பகுதியில் மகளிர் சுயஉதவி குழுவில் கடன் வாங்கியிருந்தார்.

ஆனால் அந்த கடனை அவரால் செலுத்த முடியவில்லை. இதனால் மகளிர் குழுவினர் அவரை கடனை திருப்பி செலுத்துமாறு தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளனர். கடனை செலுத்த முடியாததால் தனது குழந்தைகளை அழைத்துக்கொண்டு கொங்கேசுவரி, கலியனேந்தலில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார்.

இந்தநிலையில் நேற்று கொம்புகாரனேந்தல் மகளிர் சுயஉதவி குழுவினர் கலியனேந்தலில் உள்ள கொங்கேசுவரியின் பெற்றோர் வீட்டிற்கு கடனை கேட்டு சென்றுள்ளனர்.

ஆனால் அங்கு கொங்கேசுவரி இல்லை. இதனையடுத்து மகளிர் குழுவினர் கொங்கேசுவரியின் தாயார் நாகம்மாள், தம்பி மாயகண்ணன் மற்றும் அவருடைய குழந்தைகள் கதிர்வேல், பிரியங்காவை அழைத்துக்கொண்டு கொம்புகாரனேந்தலுக்கு சென்றுவிட்டனர். இந்த விஷயம் அறிந்த கொங்கேசுவரி குழந்தைகளை தூக்கி சென்ற விரக்தியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

கொங்கேசுவரி இறந்த செய்தியை அறிந்த மகளிர் குழுவினர் அவருடைய தாயாரையும், குழந்தைகளையும் விடுவித்தனர். இதனையடுத்து தாயார் நாகம்மாள், குழந்தைகளை அழைத்துக்கொண்டு ஆஸ்பத்திரிக்கு சென்றார். இந்த சம்பவம் குறித்து பழையனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

தவெக கூட்டத்தில் உணவு கிடையாது.. தண்ணீர் பாட்டில் மட்டும்தான்.. செங்கோட்டையன் விளக்கம்
தொடர் விடுமுறை.. சொந்த ஊர் போறீங்களா?.. போக்குவரத்துக்கழகம் சொன்ன குட்நியூஸ்..!