அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் பத்து பேருக்கு பலத்த காயம்; நல்ல வேளையாக உயிர்சேதம் இல்லை…

 
Published : Aug 31, 2017, 08:25 AM ISTUpdated : Sep 19, 2018, 01:07 AM IST
அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் பத்து பேருக்கு பலத்த காயம்; நல்ல வேளையாக உயிர்சேதம் இல்லை…

சுருக்கம்

Ten people were injured when government buses face collision

காஞ்சிபுரம்

காஞ்சிபுரத்தில் அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் பத்து பேர் பலத்த காயம் அடைந்தனர். விபத்து குறித்து காவலாளர்கள் விசாரித்து வருகின்றனர்.

சென்னையில் இருந்து நாகப்பட்டினத்திற்கு கிழக்கு கடற்கரைச் சாலையில் மாமல்லபுரம் வழியாக அரசு விரைவு பேருந்து ஒன்று நேற்று சென்றுக் கொண்டிருந்தது.

அப்போது புதுச்சேரியில் இருந்து அரசு விரைவு பேருந்து ஒன்று சென்னையை நோக்கி வேகமாக வந்தது. பூஞ்சேரி என்ற இடத்தில் இரண்டு பேருந்துகளும் வந்தபோது கண் இமைக்கும் நேரத்தில் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக் கொண்டன.

இதில் நாகப்பட்டினத்துக்கு சென்ற பேருந்து பள்ளத்தில் இறங்கி ஒரு குடிசை மீது மோதி நின்றது. அதேபோல் சென்னை சென்ற புதுச்சேரி பேருந்து இடது பக்கத்தில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது.

இதில் இரண்டு பேருந்துகளில் பயணம் செய்த பத்து பயணிகள் படுகாயம் அடைந்தனர். இவர்கள் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இந்த விபத்தில் நல்ல வேளையாக உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை.

இந்த விபத்து காரணமாக கிழக்கு கடற்கரை சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

PREV
click me!

Recommended Stories

நாளை தவெக வில் சேருகிறார் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம்..! டெல்டாவை தட்டி தூக்க பக்கா ஸ்கெட்ச்
ஜி.கே.மணி மனுசனே இல்ல.. அப்பாவையும், என்னையும் பிரிச்சிட்டாரு.. போட்டுத் தாக்கிய அன்புமணி!