மாணவனை அடித்து காதை செவிடாக்கிய ஆசிரியர்...!!

Asianet News Tamil  
Published : Nov 09, 2016, 01:30 AM ISTUpdated : Sep 19, 2018, 01:17 AM IST
மாணவனை அடித்து காதை செவிடாக்கிய ஆசிரியர்...!!

சுருக்கம்

கடலூரில் ஆசிரியர் அடித்ததால் காது கேட்கும் திறன் பாதிக்கப்பட்ட மாணவனுக்கு நீதி கிடைக்க வேண்டும் என தாய் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கடலூர் சோனங்குப்பத்தைச் சேர்ந்த பொற்செழியனின் மகன் பிரதாப், நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் 10ஆம் வகுப்பு பயின்று வருகிறார். கடந்த 3ஆம் தேதி பள்ளிக்கு சீருடை இல்லாமல் வந்த பிரதாப்பை, உடற்கல்வி ஆசிரியர் கன்னத்தில் அடித்ததால் மயங்கி கீழே விழுந்தார்.

இதனையடுத்து மருத்துவமனையில் நடத்தப்பட்ட சோதனையில் பிரதாப்பின் காது கேட்கும் திறன் 80% அளவிற்கு குறைந்துள்ளதாக மருத்துவர் தெரிவித்தார். சம்பவத்தை கேள்விபட்டு அழுத அம்மாணவனின் தாய், தனது மகனுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

சென்னைதான் எப்பவும் டாப்! போகிக்கும் பொங்கலுக்கும் சேர்த்து ரூ. 518 கோடி மது விற்பனை!
அனல் பறந்த பாலமேடு ஜல்லிக்கட்டு.. குலுக்கல் முறையில் காரைத் தூக்கிய அஜித்! டிராக்டர் வென்ற குலமங்கலம் காளை!