துரோகமும் துரோகமும் கைகோர்த்து கொண்டது - டிடிவி தினகரன் தடாலடி...!

First Published Oct 24, 2017, 1:08 PM IST
Highlights
TDV Dinakaran said that betrayal and betrayal are part of the fact that the Election Commission is right to inquire properly.


தேர்தல் ஆணையம் சரியாக விசாரிக்க வேண்டும் என்பதற்காகவே அவகாசம் கேட்கிறோம் எனவும் துரோகமும் துரோகமும் கைகோர்த்து கொண்டுள்ளது எனவும் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். 

அதிமுக 46  வது ஆண்டுவிழா எம்.ஜி.ஆர் வாழ்ந்து வந்த ராமாபுரம் இல்லத்தில் டிடிவி தினகரன் அணி கொண்டாடியது. 
பின்னர், செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன், அதிமுக 46 வது ஆண்டு விழாவை ராமாபுரத்தில் கொண்டாடுமாறு சசிகலா கூறியிருந்தார். அதன்படி இன்று கொண்டாடப்பட்டது எனவும் எம்.ஜி.ஆர் வாழ்ந்த இடத்தில் விழா கொண்டாடியது மகிழ்ச்சி அளிக்கிறது எனவும் தெரிவித்தார்.

மேலும் ஒன்றரை கோடி தொண்டர்கள் இருக்கும் இடத்திலேயே அதிமுகவும் இருக்கும் எனவும் இரட்டை இலை சின்னம் எங்களுக்கே கிடைக்கும் எனவும் தெரிவித்தார். 

ஆட்சிக்கு எதிராக வாக்களித்த ஒபிஎஸ் உள்ளிட்ட 12 பேரின் பதவி நிச்சயம் பறிபோகும் எனவும் ஆர்.கே.நகர் தேர்தலில் தான் யாருக்கும் பணம் கொடுக்கவில்லை எனவும் தெரிவித்தார். 

தேர்தல் ஆணையம் சரியாக விசாரிக்க வேண்டும் என்பதற்காகவே அவகாசம் கேட்கிறோம் எனவும் துரோகமும் துரோகமும் கைகோர்த்து கொண்டுள்ளது எனவும் தெரிவித்தார்.
 

click me!