தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டம் இன்று தொடங்கிய நிலையில், நாளை வேளாண்மை பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது. இந்த கூட்டமானது வருகிற ஏப்ரல் 21 ஆம் தேதி வரை நடைபெற இருப்பதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

03:44 PM (IST) Mar 20
தமிழ்நாடு சட்டசபையில் இன்று நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் 2023 - 2024ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார் அதில் பலரும் எதிர்பார்த்த மகளிருக்கான உரிமை தொகை எப்போது தட்டப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
03:26 PM (IST) Mar 20
தமிழக அரசின் 2023ம் ஆண்டின் பட்ஜெட் இன்று நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று தாக்கல் செய்தார். இதில் பல்வேறு துறை சார்ந்த முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். கொங்கு மண்டலத்தை மையமாக வைத்து தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளதா ? என்ற கேள்வி எழுந்துள்ளது.
03:12 PM (IST) Mar 20
குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என்று தமிழக அரசின் பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
01:54 PM (IST) Mar 20
அனைவராலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மகளிர் உரிமைத் தொகை, பத்திரப்பதிவு கட்டணம் குறைப்பு, மெட்ரோ ரயில் என பல்வேறு திட்டங்கள் குறித்த அறிவிப்பு தமிழ்நாடு அரசின் 2023ம் பட்ஜெட்டில் வெளியாகி உள்ளது.
01:54 PM (IST) Mar 20
தோல் அல்லாத காலணி தொழிற்சாலைகள் புதிதாக ராணிப்பேட்டை மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் புதிய தொழிற்சாலைகள் அமைக்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
01:53 PM (IST) Mar 20
மாற்றுத்திறனாளிகளுக்காக மாத ஓய்வூதியம் ₹1500 ஆகவும், கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு நிதியுதவித் தொகை ₹2000 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
01:53 PM (IST) Mar 20
மொழிப்போர் தியாகிகளான தாளமுத்து, நடராசனுக்கு சென்னையில் நினைவிடம் அமைக்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
01:40 PM (IST) Mar 20
பத்திரப்பதிவு கட்டணம் 4 சதவீதத்தில் இருந்து 2 சதவீதமாக குறைக்கப்பட்டுவதாக தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
மேலும் படிக்க
12:53 PM (IST) Mar 20
நாட்டின் எல்லைகளை பாதுகாக்கும் போது போர் மற்றும் போர் சார்ந்த நடவடிக்கைகளில் உயிரிழந்தால் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர்களுக்கு வழங்கப்படும் ரூ.20 லட்சம் நிதியுதவி ரூ.40 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
12:49 PM (IST) Mar 20
மாற்றுத்திறனாளிகளுக்காக மாத ஓய்வூதியம் ரூ.1500 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு நிதியுதவித் தொகை ரூ.2000 ஆக உயர்த்தப்படுவதாக தமிழ்நாடு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
12:05 PM (IST) Mar 20
நிலம் வாங்குவோரின் சுமையை குறைக்க பதிவுக்கட்டணத்தை 4ல் இருந்து 2% ஆக குறைக்க அரசு முடிவு செய்துள்ளது.
12:04 PM (IST) Mar 20
மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்குவதற்காக ரூ. 305 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என நிதியமைச்சர் தெரிவித்தார்.
12:00 PM (IST) Mar 20
வரும் நிதியாண்டில் 400 கோயில்களில் திருப்பணிகள் முடிக்கப்பட்டு, குடமுழுக்கு நடத்தப்படும் என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார்.
11:57 AM (IST) Mar 20
மகளிர் உரிமைத் தொகை ரூ.1000 வழங்கும் திட்டம் செப்டம்பர் 15ஆம் தேதி அறிஞர் அண்ணா பிறந்தநாளன்று தொடங்கப்படும் என நிதியமைச்சர் அறிவித்தார்.
11:54 AM (IST) Mar 20
சமையல் கியாஸ் மானியம் வழங்கும் திட்டம் வரும் செப்டம்பர் 15 முதல் செயல்படுத்தப்படும் என நிதியமைச்சர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
11:42 AM (IST) Mar 20
சென்னை, தாம்பரம், ஆவடி, கோவை, மதுரை, திருச்சி, சேலம் ஆகிய மாநகராட்சிகளின் முக்கிய பொது இடங்களில் இலவச WiFi சேவைகள் வழங்கப்படும்
11:25 AM (IST) Mar 20
புதிய வகுப்பறைகள் மற்றும் ஆய்வகங்கள் கட்ட 1500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டத்திற்கு 500 கோடி.
எண்ணும் எழுத்து திட்டம் 4 மற்றும் 5 ஆம் வகுப்புகளுக்கு ரூ.110 கோடி செலவில் விரிவுபடுத்தப்படும். தற்போது 1 முதல் 3ம் வகுப்பு வரை மட்டுமே செயல்படுத்தப்படுகிறது. பல்வேறு துறைகளின் கீழ் இயங்கும் அனைத்துப் பள்ளிகளும் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் கொண்டு வரப்படும்.
மதுரையில் கலைஞர் நினைவு நூலகம் ஜூன் மாதம் திறக்கப்படும். 10 கோடி செலவில் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் புத்தகக் கண்காட்சிகள் தொடர்ந்து நடத்தப்படும்.
11:20 AM (IST) Mar 20
கோவையில் மெட்ரோ ரயில் திட்டம் ரூ.9000 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும். மதுரையில் ரூ.8500 கோடி செலவில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும் என தமிழ்நாடு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
11:17 AM (IST) Mar 20
பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழ்நாட்டில் ரயில்வே போக்குவரத்து பங்களிப்பு குறைவாக உள்ளது. இதை சரி செய்ய, ரயில்வே அமைச்சகம் உடன் இணைந்து புதிய வழித்தடங்களை உருவாக்க புதிய அரசு நிறுவனம் உருவாக்கப்படும் என நிதியமைச்சர் அறிவித்துள்ளார்.
11:13 AM (IST) Mar 20
சென்னை தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை அண்ணா சாலையில் 4 வழி சாலையாக மேம்பாலம் கட்டப்படும். சர்வதேச நிபுணர்களின் கருத்துக்கள் பெறப்பட்டு, நவீன அம்சங்களுடன் இந்த மேம்பாலம் கட்டப்படும் என தமிழ்நாடு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
11:12 AM (IST) Mar 20
நான் முதல்வன் திட்டத்திற்கு ரூ.50 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். சென்னை கண்ணகி நகர், நாவலூர், பெரும்பாக்கம், அத்திப்பட்டு பகுதியில் ரூ.20 கோடி செலவில் விளையாட்டு மையங்கள் அமைக்கப்படும்.
11:10 AM (IST) Mar 20
அடையாறு ஆற்றில் 44 கி.மீ தூரத்திற்கு தூய்மைப்படுத்தும் திட்டம், கரைகளில் பூங்கா மற்றும் பொழுதுபோக்கு மையங்கள் தனியார் பங்களிப்புடன் அமைக்கப்படும் என நிதியமைச்சர் அறிவித்துள்ளார். கோவை, மதுரை நகரங்களை மேம்படுத்த எழில்மிகு கோவை, மாமதுரை என்ற வளர்ச்சித்திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
11:08 AM (IST) Mar 20
5145 கி.மீ கிராமப்புற சாலைகள் ரூ.2000 கோடி மதிப்பீட்டில், முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்படும் என நிதியமைச்சர் அறிவித்துள்ளார்.
11:05 AM (IST) Mar 20
ஈரோடு மாவட்டத்தில் தந்தை பெரியார் வனவிலங்கு சரணாலயம் புதியதாக அமைக்கப்படும். இது மாநிலத்தின் 18வது சரணாலயமாக இருக்கும் என நிதியமைச்சர் கூறியுள்ளார்.
11:04 AM (IST) Mar 20
சென்னை கிண்டியில் கட்டப்பட்டு வரும் 1000 படுக்கை வசதி கொண்ட கலைஞர் நினைவு பன்னோக்கு மருத்துவமனை இந்தாண்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும் என நிதியமைச்சர் கூறியுள்ளார்.
11:00 AM (IST) Mar 20
மாற்றுத்திறனாளிகளுக்காக மாத ஓய்வூதியம் ரூ.1500 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு நிதியுதவித் தொகை ரூ.2000 ஆக உயர்த்தப்படுவதாக தமிழ்நாடு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
10:57 AM (IST) Mar 20
பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாடு திட்டத்தில் புதிய வகுப்பறைகள், ஆய்வகங்கள் கட்ட ரூ.1500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
10:53 AM (IST) Mar 20
மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.30,000 கோடி அளவில் வங்கிக்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
10:50 AM (IST) Mar 20
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் விரிவாக்கத்திற்காக ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அனைத்து அரசு தொடக்கபள்ளிகளிலும் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும். இத்திட்டத்தின் மூலம் 18 லட்சம் மாணவர்கள் பயன் பெறுவார்கள் என நிதியமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார்.
10:47 AM (IST) Mar 20
ஆதிதிராவிடர், பழங்குடியின பிரிவு மாணவர்களுக்கு 4 புதிய விடுதிகள் நவீன வசதிகளுடன் கட்டப்படும். இதன் பராமரிப்பு பணிகள் நிபுணத்துவம் வாய்ந்த நிறுவனங்களிடம் அமைக்கப்படும் என நிதியமைச்சர் அறிவித்துள்ளார்.
10:43 AM (IST) Mar 20
ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வுகளுக்கு தேர்ந்தெடுக்கப்படும் 1000 மாணவர்களுக்கு முதல்நிலை தேர்வுக்கு தயாராக ரூ.7500 வழங்கப்படும் என தமிழ்நாடு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
10:38 AM (IST) Mar 20
54 அரசு ஐ.டி.ஐ.க்கள் திறன்மிகு தொழிற்பயிற்சி மையங்களாக மாற்றப்படும். பெருந்தலைவர் காமராஜர் கல்லூரி மேம்பாட்டு திட்டத்தின் கீழ், வரும் நிதியாண்டிலும் ரூ.200 கோடி செலவில் பாலிடெக்னிக், கலை அறிவியல் கல்லூரிகள் மேம்படுத்தப்படும்என நிதியமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார்.
10:35 AM (IST) Mar 20
தமிழ்நாடு பட்ஜெட்டில் மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு ரூ.18,661 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வடெசன்னை மக்களின் மருத்துவ தேவையை பூர்த்தி செய்யும் வகையில் ஸ்டான்லி மருத்துவமனைக்கு ரூ.147 கோடியில் புதிய கட்டிடம் கட்டப்படும் என நிதியமைச்சர் அறிவித்துள்ளார்.
10:30 AM (IST) Mar 20
நாட்டுப்புற கலைகளை பாதுகாக்க, கலைஞர்களை பாதுகாக்க 11 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வயது முதிர்ந்த மேலும் 590 தமிழறிஞர்களுக்கு இலவச பேருந்து பயணம். தமிழ் கணினி பண்பாட்டு மாநாடு நடத்தப்படும். தஞ்சையில் மாபெரும் சோழர் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என தமிழ்நாடு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
10:28 AM (IST) Mar 20
இலங்கை மறுவாழ்வு முகாம்களில் மீதமுள்ள 3,959 வீடுகள் கட்ட வரும் நிதியாண்டில் ரூ.223 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என தமிழ்நாடு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
10:27 AM (IST) Mar 20
இந்து சமய அறநிலையத்துறை, வனத்துறையின் கீழ் செயல்படும் அனைத்து பள்ளிகளும், பள்ளிக்கல்வித்துறையின் கீழ் கொண்டு வரப்படும். இந்த பள்ளிகளில் பணியாற்றும் அனைவரின் பணிப்பலன்கள் பாதுகாக்கப்படும் என நிதியமைச்சர் கூறியுள்ளார்.
10:23 AM (IST) Mar 20
நாட்டின் எல்லைகளை பாதுகாக்கும் போது போர் மற்றும் போர் சார்ந்த நடவடிக்கைகளில் உயிரிழந்தால் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர்களுக்கு வழங்கப்படும் ரூ.20 லட்சம் நிதியுதவி ரூ.40 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
10:23 AM (IST) Mar 20
நாட்டின் எல்லைகளை பாதுகாக்கும் போது போர் மற்றும் போர் சார்ந்த நடவடிக்கைகளில் உயிரிழந்தால் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர்களுக்கு வழங்கப்படும் ரூ.20 லட்சம் நிதியுதவி ரூ.40 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
10:16 AM (IST) Mar 20
சென்னை சங்கமம் கலைவிழா மேலும் 8 முக்கிய நகரங்களில் விரிவு செய்யப்படும். நாட்டுப்புற கலைகளை பாதுகாக்க, கலைஞர்களை பாதுகாக்க ரூ.11 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தி திணிப்பு எதிர்ப்புக்காக உயிர் நீத்த நடராஜன், தாளமுத்து இருவருக்கும் சென்னையில் நினைவிடம். அண்ணல் அம்பேத்கரின் புத்தகங்கள் தமிழில் மொழிபெயர்க்கப்படும் என நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார்.
10:12 AM (IST) Mar 20
கடும் நிதி நெருக்கடியிலும் மிகக்கடினமான சீர்திருத்தங்களை மேற்கொண்டு, செலவினங்களில் ரூ.30,000 கோடி குறைத்துள்ளோம். வரும் ஆண்டுகளில் இது மேலும் குறைக்கப்படும் என நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார்.