மீண்டுமா.!! முகக்கவசம் அணியுங்கள்- தமிழக சுகாதாரத்துறை அதிரடி உத்தரவு

Published : May 30, 2025, 10:37 PM ISTUpdated : May 30, 2025, 10:39 PM IST
mask

சுருக்கம்

கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருவதால், தமிழக பொது சுகாதாரத்துறை பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. கை கழுவுதல், முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மீண்டும் பரவும் கொரோனா முகக்கவசம் அணியுங்கள் : கொரோனா பாதிப்பால் கடந்த 2019 ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரை தமிழகம் மட்டுமல்ல உலகமே முடங்கி கிடந்தது. கொத்து கொத்தாக மக்கள் உயிர் இழந்தனர். கொரோனா பரவலை தடுக்க லாக்டவுன் அறிவிக்கப்பட்டதால் பல கோடி மக்கள் உணவு இல்லாமல் தவித்தனர். தற்போது தான் இயல்பு வாழ்க்கைக்கு மக்கள் திரும்பியுள்ள நிலையில் மீண்டும் கொரோனா அச்சம் தலை தூக்கியுள்ளது. அந்த வகையில் வெளிநாடுகளில் பரவி வந்த கொரோனா பரவில் இந்தியாவிலும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

இந்தியாவில் பரவும் கொரோனா

இந்திய அளவில் 1,000க்கும் மேற்பட்டோர் தற்போது கொரோனாவால் சிகிச்சை பெற்று வருகின்றனர். கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இதுவரை 6 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.தமிழகத்திலும் 65 வயது முதியவர் ஒருவரும், கொரோனா தொற்றுக்கு பலியாகியுள்ளார். இந்த உயிரிழப்பு மக்களை அச்சம் அடையவைத்துள்ள நிலையில், முதியவருக்கு உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பல இணை நோய்கள் இருந்ததாகவும், கொரோனா வைரஸ் காரணமாக அவர் உயிரழக்கவில்லை. என பொது சுகாதாரத்துறை தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகள் பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், சமீபத்திய அறிக்கைகள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் COVID-19 பாதிப்புகள் மீண்டும் அதிகரித்து வருகிறது. மே மாதத்தில் தமிழ்நாடு உட்பட பல மாநிலங்களில் குறிப்பிடத்தக்க கொரோனா அதிகரிப்பு காணப்பட்டது. இது தொடர்பாக, அனைத்து மாவட்ட சுகாதார அதிகாரிகள், நகர சுகாதார அதிகாரிகள் மற்றும் நகராட்சி சுகாதார அதிகாரிகள், நோய் கண்காணிப்பை தீவிரப்படுத்தவும், இன்ஃப்ளூயன்ஸா போன்ற கடுமையான சுவாச நோய்த்தொற்றுகள் பாதிப்புகள் முன்கூட்டியே கண்டறிந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை செயல்படுத்தவும் அறிவுறுத்தப்படுவதாக கூறியுள்ளது.

பாதுகாப்பு வழிமுறைகள்

  • கைகளை சுகாதாரமாக வைத்திருத்தல் : சோப்புடன் வழக்கமான கை கழுவுதல் அல்லது கை சுத்திகரிப்பான்களைப் பயன்படுத்துவதை அதிகரிக்க வேண்டும்
  • பொது இடங்களில் முககவசங்களை பயன்படுத்துதல்: சுவாசப் பரவலைக் குறைக்க நெரிசலான இடங்களில் முககவசங்கள் பயன்படுத்த வேண்டும்
  • இருமல்/தும்மலின் போது ஒரு துணியால் அல்லது முழங்கையால் மூடிக்கொள்ளவும், துணிகளை சுகாதாரமாக அப்புறப்படுத்தவும் பொதுமக்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.
  • முகத்தைத் தொடுவதைத் தவிர்க்கவும்: தொற்று அபாயத்தைக் குறைக்க கண்கள், மூக்கு மற்றும் வாயைத் தொடுவதைத் தவிர்க்க வேண்டும்
  • உடல் ரீதியான இடைவெளி: சுவாச நோயின் அறிகுறிகளைக் காட்டும் நபர்களிடமிருந்து பாதுகாப்பான தூரத்தைப் கடைப்பிடிக்க வேண்டும்
  • காய்ச்சல், தொண்டை வலி, இருமல் அல்லது உடல் வலி போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால், ஆரம்பத்திலேயே மருத்துவ உதவியை நாடுமாறு தனிநபர்களை வலியுறுத்த வேண்டும்.
  • உடல்நிலை சரியில்லாதபோது வீட்டிலேயே இருங்கள்: நோய் மேலும் பரவுவதைத் தடுக்க நோய்வாய்ப்பட்டிருக்கும்போது வீட்டிலேயே இருப்பதை வலியுறுத்துங்கள்.
  • தொலைபேசிகள், கதவு கைப்பிடிகள் மற்றும் லைட் சுவிட்சுகள் போன்ற பொதுவாகத் தொடப்படும் மேற்பரப்புகளை தொடர்ந்து சுத்தம் செய்ய அறிவுறுத்துங்கள்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

TN Rain Update: வெயிலுக்கு குட்பை! தமிழகத்தில் ருத்ரதாண்டவம் ஆடப்போகும் மழை! எந்தெந்த மாவட்டங்கள்?
Tamilnadu Power Cut: செல்போனில் சார்ஜ் போட்டு வச்சுக்கோங்க! நாளை காலை 9 மணி முதல் மின்தடை! எந்தெந்த பகுதிகளில்?