ஏப். 25 இலங்கை பிரதமர் இந்தியா வருகை - மீனவர் பிரச்சனை குறித்து ஆலோசிக்க உள்ளதாக தகவல்...

 
Published : Apr 20, 2017, 07:27 PM ISTUpdated : Sep 19, 2018, 03:10 AM IST
ஏப். 25 இலங்கை பிரதமர் இந்தியா வருகை - மீனவர் பிரச்சனை குறித்து ஆலோசிக்க உள்ளதாக தகவல்...

சுருக்கம்

srilanka prime minister will come to india and speech about fisherman problem

அரசு சுற்றுமுறை பயணமாக இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே ஏப்ரல்  25 ஆம் தேதி இந்தியா வருகிறார். அப்போது மீனவர் பிரச்சனை குறித்து பிரதமரிடம் ஆலோசிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியா இலங்கை மீனவர்கள் பிரச்சனை தொடர்கதையாகி வருகிறது. தமழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து அவர்களிடம் இருந்து படகுகளை பறிமுதல் செய்வது, பின்னர், தமிழக முதலமைச்சர் பிரதமருக்கு கடிதம் எழுதுவது, பிறகு மீனவர்களை விடுவிப்பது என தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே அரசு சுற்றுமுறை பயணமாக வரும் ஏப்ரல் 25 ஆம் தேதி இந்தியா வருகிறார்.

ஏப்ரல் 26 ஆம் தேதி பிரதமர் மோடியை சந்தித்து பேசுகிறார். அப்போது மீனவர் பிரச்சனை குறித்து ஆலோசனை நடத்தப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சுற்றுபயணம் ஏப்ரல் 26 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி நடைபெற உள்ளது.

மேலும் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், வெங்கையா நாயுடு ஆகியோரையும் ரணில் விக்கிரமசிங்கே சந்தித்து பேச உள்ளார்.

PREV
click me!

Recommended Stories

சீமானின் பேச்சை ரசித்து கேட்ட தொண்டரை கழுத்தை பிடித்து தள்ளிய நிர்வாகிகள்.. நாதக நிகழ்ச்சியில் பரபரப்பு..
டிடிவி, ஓபிஎஸ் உடன் கூட்டணி பேச்சு., அதிமுகவில் இருந்து பலரும் தவெக வருவார்கள்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி