தமிழ் கலாச்சாரம், மொழி உணர்வு மங்காமல் இருக்க உறுதிமொழி எடுக்க வேண்டும் - டில்லி முன்னாள் சிறப்பு பிரதிநிதி

 
Published : Aug 18, 2017, 08:22 AM ISTUpdated : Sep 19, 2018, 01:02 AM IST
தமிழ் கலாச்சாரம், மொழி உணர்வு மங்காமல் இருக்க உறுதிமொழி எடுக்க வேண்டும் - டில்லி முன்னாள் சிறப்பு பிரதிநிதி

சுருக்கம்

should promising to dint get silent of Tamil consciousness - delhi former Special Representative

தேனி

தமிழ் கலாச்சாரம் மற்றும் மொழி உணர்வு மங்காமல் இருக்க மாணவர்கள் உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டும் என்று டில்லி முன்னாள் சிறப்பு பிரதிநிதி செல்வேந்திரன் கேட்டுக் கொண்டார்.

தேனி மாவட்டம் உத்தமபாளையம் ஹாஜி கருத்தராவுத்தர் கல்லுாரியில் குணங்குடியார் தமிழ் பேரவை துவக்கவிழா நடைப்பெற்றது.

இதற்கு கல்லுாரி தாளாளர் மற்றும் செயலர் எம்.தர்வேஷ்முகைதீன் தலைமை தாங்கினார்.
முதல்வர் முகமது மீரான் முன்னிலை வகித்தார். தமிழ்த்துறை தலைவர் பேரா.அப்துல்சமது வரவேற்றார்.

இதில், டில்லி முன்னாள் சிறப்பு பிரதிநிதி செல்வேந்திரன் பங்கேற்று பேசியது:

''இன்றைக்கு கொஞ்சம் கொஞ்சமாக தமிழ்மொழி தேய்ந்து வருகிறது. அதன் பயன்பாடு குறைந்து வருகிறது. மாணவர்கள் தமிழ் கலாச்சாரம் மற்றும் மொழி உணர்வு மங்காமல் இருக்க உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டும்.

பிற மொழிகளை பயன்படுத்துவது தவறில்லை. ஆனால் நமது தாய்மொழியாம் தொன்மை வாய்ந்த தமிழை மறக்க கூடாது” என்று பேசினார்.

 

PREV
click me!

Recommended Stories

தவெகவில் இணைந்த நாஞ்சில் சம்பத்..! அடுத்தடுத்து மூத்த தலைவர்கள் ஐக்கியம்! விஜய் குஷி!
இந்து கோயிலை இடிக்க தீர்ப்பு கொடுக்க கோர்ட் வேண்டும்..! தீபம் ஏற்றச்சொன்னால் கோர்ட் வேண்டாமோ? அண்ணாமலை ஆவேசம்..!