தேர்தலில் பின்னடைவு தமிழகத்திற்கு தான் ...பாஜகவிற்கு இல்லை... தமிழிசை சௌந்தரராஜன் அதிரடி...!
நாடே பெருத்த எதிர்பார்ப்பில் உள்ள ஒரு செய்தி என்னவென்றால், தமிழகத்தில் நடைபெறும் ஆர்.கே நகர் இடைதேர்தல் மட்டுமே என்று சொல்லலாம்....
தமிழகத்தில் நிலவி வந்த,அரசியல் குழப்பத்திற்கு இடையே மேலும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தும் விதமாக ஆர்.கே நகர் தேர்தல் முடிவுகள் உள்ளன
ஆர்.கே நகர் இடைதேர்தலில் திமுக வெற்றி பெரும் என எதிர்பார்க்கப் பட்ட நிலையில், தினகரன் வரலாறு காணாத அளவிற்கு முன்னிலை வகித்து வருகிறார்
பாதிக்கு பாதி,அதிமுக வை விட சுயேட்சை வேட்பாளர் தினகரன் முன்னிலை வகித்து வருகிறார்.
அதே சமயத்தில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கலைகோட்டுதயம் - விட, பாஜக பின் தங்கி உள்ளது.
அதுவும் சொற்ப அளவில் பாஜக பின் தங்கி உள்ளது.தற்போதைய நிலவரப்படி, பாஜக 837 வாக்குகளை மட்டுமே பெற்று உள்ளது.
இதனை கிண்டல் செய்யும் விதமாக பலரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில்,தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார்
அப்போது, "தேர்தலில் பின்னடைந்தது பாஜக இல்லை...தமிழகம் தான் " என தெரிவித்து உள்ளளர்.