
சுதந்திரப் போராட்ட வீரரும், சுதேசி இயக்கத்தின் முன்னோடியுமான 'கப்பலோட்டிய தமிழன்' வ.உ.சிதம்பரனாரின் 155-வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னையில் உள்ள அவரது உருவச்சிலைக்குத் தமிழக அமைச்சர்கள் மற்றும் தலைவர்கள் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்நிகழ்வில் அமைச்சர் ராஜ் மோகன் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த கே.ஜி. அருண்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டு தங்களது கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர். பின்னை பேட்டியளித்த அமைச்சர் ராஜ்மோகன் எங்கள் முதல்வர் விஜய் மீது நம்பிக்கை வைத்து வாழ்த்து சொன்ன அஜித் அவர்களுக்கு நன்றி என்று பேசினார் .