ஓ.பி.எஸ் ஆதரவு ஜே.சி.டி பிரபாகரன் வீட்டில் 'அதிரடி ரெய்டு' - வருமான வரி சோதனையால் சிக்கல்...

 
Published : Mar 15, 2017, 05:39 PM ISTUpdated : Sep 19, 2018, 02:42 AM IST
ஓ.பி.எஸ் ஆதரவு ஜே.சி.டி பிரபாகரன் வீட்டில் 'அதிரடி ரெய்டு' - வருமான வரி சோதனையால் சிக்கல்...

சுருக்கம்

Raid Action opies support jeciti Prabhakaran house - the problem income tax raid

சசிகலா அணியில் இருந்து விலகி ஓ.பி.எஸ் பக்கம் சாய்ந்துள்ள ஜே.சி.டி பிரபாகரன் வீட்டில் வருமான வரி சோதனை நடைபெற்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

வில்லிவாக்கம் சட்டமன்ற தொகுதியின் முன்னாள் உறுப்பினரான ஜே.சி.டி. பிரபாகரன் சிறு தொழில் வளர்ச்சி கழகத்தின் வாரிய தலைவராகவும் பதவி வகித்தார்.

2011 முதல் 2016 ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் 5 வருடங்கள் எம்.எல்.ஏ.வாக இருந்தவர். ஜெ. உயிருடன் இருக்கும் போது அதிமுக சிறுபாண்மை பிரிவில் நிர்வாகியாகவும் பதவி வகித்தவர்.

ஜே.சி.டி.பிராபகனுக்கு சென்னை சேத்துப்பட்டு மற்றும் வில்லிவாக்கம் ஆகிய இடங்களில் வீடு மற்றும் அலுவலகங்கள் உள்ளன.

இதற்கிடையே சென்னை சேத்துப்பட்டில் உள்ள அவரது இல்லத்தில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டதால் ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் இடையே ஒரு விதமான பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது.

வருமான வரி சோதனைக்கு ஆளான ஜே.சி.டி.பிராபகரன், தற்போது ஓ.பன்னீர்செல்வத்துடன் தலைமை தேர்தல் ஆணையரைச் சந்திப்பதற்காக டெல்லி சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

PREV
click me!

Recommended Stories

மதவெறியைத் தூண்டி இளைஞரின் உயிரைப் பறித்த பாஜக.. திருமா ஆவேசம்
கீழடி, நம் தாய்மடி! பொருநை, தமிழரின் பெருமை! - முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்