தனியார் ஏடிஎம்-மில் இருந்து ரூ.4 லட்சம் திருடிய ஏடிஎம் பணம் நிரப்பும் ஊழியருக்கு வலைவீச்சு…

 
Published : Jul 27, 2017, 09:04 AM ISTUpdated : Sep 19, 2018, 12:56 AM IST
தனியார் ஏடிஎம்-மில் இருந்து ரூ.4 லட்சம் திருடிய ஏடிஎம் பணம் நிரப்பும் ஊழியருக்கு வலைவீச்சு…

சுருக்கம்

ATM money filling employee stolen Rs 4 lakh from private ATM

இராமநாதபுரம்

பரமக்குடியில் தனியார் ஏடிஎம்-மில் ரூ.4 இலட்சத்து 5 ஆயிரத்து 700 திருடிய, ஏடிஎம் பணம் நிரப்பும் ஊழியரை காவலாளரள் தீவிரமாக தேடி வருகின்றனர்.

சிவகங்கை மாவட்டம், வேம்பத்தூர் கிராமத்தைச் சேர்ந்த வடமலை மகன் விக்னேஷ் (24). இவர் தனியார் ஏடிஎம்-மில் பணம் நிரப்பும் வேலை செய்து வந்தார்.

அவர் பரமக்குடி ஓட்டப்பாலம் பகுதியில் உள்ள டாடா இண்டிகோ வங்கி ஏடிஎம்-மில் ரகசிய எண்ணைப் பயன்படுத்தி அதிலிருந்த ரூ.4 இலட்சத்து 5 ஆயிரத்து 700-ஐ திருடிச் சென்றுள்ளார். இந்த நிகழ்வு அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் துல்லியமாக பதிவாகியுள்ளது.

இதுகுறித்து பரமக்குடி நகர் காவல் நிலையத்தில் வங்கிக்கிளை மேலாளர் வித்யாபாஸ்கரன் புகார் அளித்தார்.

அந்த புகாரின் பேரில் காவலாளர்கள் வழக்குப் பதிந்து விக்னேஷ் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

Tamil News Live today 21 December 2025: கார் விபத்து - நடுரோட்டில் பஞ்சாயத்தை முடித்து வைத்த சிவகார்த்திகேயன்! ரியல் லைஃப் 'அமரன்' என பாராட்டும் ரசிகர்கள்!
டெட் தேர்வில் திருப்பம்! சிறுபான்மை பள்ளிகளுக்கு இனி அந்த கவலை இல்லை.. முதல்வர் போட்ட அதிரடி கையெழுத்து!