பெப்ஸி, கோலா பானங்களை தரையில் ஊற்றி ஆர்ப்பாட்டம்!

Asianet News Tamil  
Published : Jan 19, 2017, 09:02 AM ISTUpdated : Sep 19, 2018, 02:59 AM IST
பெப்ஸி, கோலா பானங்களை தரையில் ஊற்றி ஆர்ப்பாட்டம்!

சுருக்கம்

பெப்ஸி, கோலா பானங்களை தரையில் ஊற்றி ஆர்ப்பாட்டம்!

சென்னையில் வெளிநாட்டு குளிர்பானங்களை தரையில் ஊற்றி இளைஞர்கள் பீட்டாவுக்கு தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். 

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள் பற்றவைத்த தீ தற்போது கொளுந்து விட்டு எரியத் தொடங்கியுள்ளது. தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்தும்,பீட்டாவிற்கு தடை விதிக்க வலியுறுத்திம் கல்லூரி மாணவ, மாணவியர் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.  

இந்நிலையில், சென்னையை அடுத்த திருவொற்றியூரில் வெளிநாட்டு குளிர்பானங்களை தரையில் ஊற்றி இளைஞர்கள் பீட்டாவுக்கு எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.  அங்கு நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள், பள்ளி சிறுவர்களுடன் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். காந்தி சிலை முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்ட அவர்கள், பெப்ஸி கொக்கோகோலா உள்ளிட்ட குளிர்பானங்களை தரையில் ஊற்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

PREV
click me!

Recommended Stories

தூசியைப் பறக்கவிட்டுச் சீறிப்பாய்ந்த குதிரைகள் ! கமுதியில் அனல் பறந்த பாரம்பரியப் போட்டி !
NEET Protest : விஜய் மௌனம் காப்பது ஏன்? சி.ஜே.பி போராட்டத்தில் கொதித்தெழுந்த பா.ரஞ்சித்!