கோவையில் மெட்ரோ ரயில் திட்டத்தை விரைவாகச் செயல்படுத்த வலியுறுத்தியும், திட்டத்தில் நிலவும் தாமதங்களைச் சுட்டிக்காட்டியும் மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தின் போது, கோவை நகரப் போக்குவரத்தைச் சீரமைக்கவும், மெட்ரோ திட்டப் பணிகளை உடனே தொடங்கவும் வலியுறுத்தி ஆர்ப்பாட்டக்காரர்கள் முழக்கங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஈஸ்வரன், கோவை மக்களின் நீண்ட நாள் கனவுத் திட்டமான மெட்ரோ ரயில் திட்டத்தைக் காலந்தாழ்த்தாமல் விரைந்து நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.