பேரறிவாளனை ஏன் நிரந்தரமாக விடுவிக்கக் கூடாது ? மனித நேயம் மிகவும் முக்கியம் என ஸ்டாலின் உருக்கம் !!!

Asianet News Tamil  
Published : Aug 25, 2017, 07:56 AM ISTUpdated : Sep 19, 2018, 01:03 AM IST
பேரறிவாளனை ஏன் நிரந்தரமாக விடுவிக்கக் கூடாது ? மனித நேயம் மிகவும் முக்கியம் என ஸ்டாலின் உருக்கம் !!!

சுருக்கம்

Perarivalan released by parole...staline welcome

26 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டு நேற்று பேரறிவாளன் பரோலில்  விடுவிக்கப்பட்டதற்கு  திமுக செயல் தலைவர் மு.க.கஸ்டாலின் வரவேற்பு தெரிவித்ததோடு, மனிதநேய அடிப்படையில் அவரை நிரந்தரமாக விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை பெற்று பின்னர் ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்ட பேரறிவாளன், 30 நாட்கள் பரோலில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து திமுக தலைமை அலுவலகமான அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், பேரறிவாளன் பரோலில் விடுவிக்க தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை நாங்கள் வரவேற்கிறோம் என தெரிவித்தார்.

அதே நேரத்தில் பேரறிவாளனை மனித நேய அடிப்படையில் நிரந்தரமாக விடுவிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

சட்டமன்றத்தில் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் பேராறிவாளனை விடுவிக்க வேண்டும் என  பல கோரிக்கைகளை விடுத்து வந்துள்ளோம் என்றும் அவர் குறிப்பிட்டார்..

 

PREV
click me!

Recommended Stories

தமிழக எம்.பி.களுக்கு செம டோஸ் விட்ட ராகுல் காந்தி..? டெல்லியில் நடந்தது என்ன..? செல்வப்பெருந்தகை ஓபன் டாக்
திமுகவை காப்பி அடிக்கும் இபிஎஸ்.. திராவிட மாடல் ஆட்சி 2.0 கண்பார்ம்.. அமைச்சர் ரகுபதி விளாசல்..