அரியலூர் அருகே பள்ளி பேருந்து மீது லாரி மோதி விபத்து - பொதுமக்கள் சாலை மறியல்...!

Asianet News Tamil  
Published : Oct 24, 2017, 11:20 AM ISTUpdated : Sep 19, 2018, 01:20 AM IST
அரியலூர் அருகே பள்ளி பேருந்து மீது லாரி மோதி விபத்து - பொதுமக்கள் சாலை மறியல்...!

சுருக்கம்

people road protest in ariyalur about bus lorry accident

அரியலூர் அருகே பள்ளி பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் 5 மாணவர்கள் காயம் அடைந்தனர். இதனால் போக்குவரத்து பாதிப்புக்கு கண்டனம் தெரிவித்து அப்பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

அரியலூர் - ஜெயங்கொண்டம் பகுதியில் ஏராளமான தனியார் பள்ளிகள் இயங்கி வருகின்றனர். அங்கு படிக்கும் பள்ளி மாணவ மாணவிகள் தனியார் பள்ளி பேருந்து மூலம் தினமும் காலை பள்ளிக்கு செல்வர். 

மேலும் அப்பகுதியில் தொழிற்சாலைகள் இருப்பதால் லாரிகள் போக்குவரத்து அதிகமாக இருக்கும். அரியலூர் - ஜெயங்கொண்டம் சாலை மிகவும் குறுகிய நிலையில் இருப்பதால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வந்தன. 

இந்நிலையில், இன்று காலை அரியலூர் அருகே பெருமாள்சாவடியில் தனியார் பள்ளி பேருந்தும் லாரியும் மோதிக்கொண்டது. இதில் 5 மாணவர்கள் படுகாயம் அடைந்தனர். 

இதனால் விபத்தை கண்டித்து  பொதுமக்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மாறியலால் அரியலூர்-ஜெயன்கொண்டம் சாலையில் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டது. 

PREV
click me!

Recommended Stories

Budget Ooty Trip| 3 இரவுகள் ஊட்டியில் தங்கலாம்..ரயில், ஹோட்டல் எல்லாம் சேர்த்த ஒரே பேக்கேஜ்...விலை ?
CM Vijay : இதை ஏற்க முடியாது.. மக்கள் கடும் பாதிப்பு.. ஒன்றிய அரசை உலுக்கிய விஜய்யின் கடிதம்!