
சென்னை ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கான வழிகாட்டு குழுவிற்கு புதிய உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் மாநகராட்சி ஆணையரை தலைமையாக கொண்டு 7 பேர் கொண்ட புதிய குழுவின் தலைவராக சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி நியமிக்கப்பட்டுள்ளார். துணைத்தலைவராக வட சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி நியமனம் செய்யப்பட்டுள்ளார். குழு உறுப்பினர்களாக சட்டமன்ற உறுப்பினர் எழிலன், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, துணை ஆணையர் பிரசாந்த் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். சென்னை ஸ்மார்ட் சிட்டி என்பது இந்திய அரசாங்கத்தின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சகத்தின் (MoHUA), மாநகர சீரமைப்பு மற்றும் அபிவிருத்தி செயல்பாட்டுத் திட்டங்களுக்கான ஓர் அமைப்பு.
இந்த அமைப்பு 100க்கும் மேலான நகரங்களை தேர்ந்தெடுத்து, மக்களுக்கு இத்திட்டத்தைப் பற்றிய விழிப்புணர்வை உருவாக்கி அவர்களின் ஒத்துழைப்பைக் கோருவதுடன், இந்த திட்டத்தின் நடவடிக்கைகளை வெளிப்படையாக செயல்படுத்துவதிலும், அந்தந்த மாநில அரசுகள் எளிதாக இணைந்து செயல்படும் வகையில் இத்திட்டத்தின் செயல்பாடுகளில் பங்கேற்றிட விரும்பும் பங்குதாரர்களிடம் ஆலோசனை நடத்தவும் திட்டமிட்டுள்ளது. அரசு நிறுவனங்கள் மற்றும் இதர பங்குதாரர்கள் எளிதில் புரிந்துகொண்டு செயலாற்றி நிறைவேற்றும் வகையில் இந்த ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகளின் செயல்முறைக் கருவி வடிவமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சென்னை, மதுரை உள்ளிட்ட நகரங்களில் ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில்,சென்னையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக ஏற்கனவே குழு அமைக்கப்பட்டது. தற்போது அமைக்கப்பட்ட ஆலோசனைக் குழு மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளது. அதன்படி மாநகராட்சி ஆணையரை தலைமையாக கொண்டு 7 பேர் கொண்ட புதிய குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவின் தலைவராக சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி நியமிக்கப்பட்டுள்ளார். துணைத்தலைவராக வட சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும் உறுப்பினர்களாக சட்டமன்ற உறுப்பினர் எழிலன், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, துணை ஆணையர் பிரசாந்த் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். சென்னையில் ஸ்மார்ட்சிட்டி திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான ஆலோசனைகள் மற்றும் பரிந்துரைகளை இக்குழு வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.