
சென்னை தியாகராய நகரிலுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) அலுவலகம் முன்பாக, நீட் (NEET) தேர்வுக்கு எதிராக வாலிபர் சங்கம் மற்றும் மாணவர் அமைப்பினர் இணைந்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்றும், மாணவர்களின் உரிமைகளைப் பறிக்கும் நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும் அவர்கள் முழக்கமிட்டனர். அமைதியான வழியில், மலர்க் கொத்துகளை வழங்கி தங்களின் எதிர்ப்பைப் பதிவு செய்து வரும் இந்த மாணவர் போராட்டத்தை அடக்க காவல்துறை முனைவதாகவும், எந்த அடக்குமுறைக்கும் அஞ்சாமல் போராட்டம் தொடரும் என்றும் மாணவர்கள் உறுதியளித்துள்ளனர்.