மதுரை வந்தார் பிரதமர் மோடி... - ஆளுநர், முதலமைச்சர் வரவேற்பு...!!

 
Published : Jul 27, 2017, 10:38 AM ISTUpdated : Sep 19, 2018, 12:56 AM IST
மதுரை வந்தார் பிரதமர் மோடி... - ஆளுநர், முதலமைச்சர் வரவேற்பு...!!

சுருக்கம்

modi reached madurai

முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் நினைவு மண்டபத்தை திறந்து வைப்பதற்காக பிரதமர் மோடி தனி விமானம் மூலம் மதுரை வந்தார். அவரை ஆளுநர் வித்யாசாகர் ராவ், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் செல்லூர் ராஜூ ஆகியோர் வரவேற்றனர்.

முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமுக்கு, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் சார்பில் ராமேஸ்வரம் அருகே உள்ள பேய்க்கரும்பு என்ற இடத்தில் 15 கோடி ரூபாய் செலவில் நினைவு மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த மண்டபத்தை, அப்துல் கலாமின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளான இன்று பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கிறார்.

இதற்காக தனி விமானம் மூலம் இன்று காலை 10.30 மணியளவில் மதுரை வந்தடைந்தார் பிரதமர் மோடி.  அவரைஆளுநர் வித்யாசாகர் ராவ், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் செல்லூர் ராஜூ ஆகியோர் வரவேற்றனர்.

இன்னும் சற்று நேரத்தில் ராணுவ ஹெலிகாப்டர் மூலம் ராமெஷ்வரம் வரும் மோடி, பின்னர் அங்கிருந்து குண்டு துளைக்காத கார் மூலம் பேய்க்கரும்பு சென்றடைகிறார்.

11 மணியளவில் நினைவு மண்டபத்தை திறந்து வைத்து பொதுமக்கள் மத்தியில் உரையாற்றுகிறார்.

PREV
click me!

Recommended Stories

தமிழர்களின் பெருமையை பறைசாற்றும் பொருநை அருங்காட்சியகம்.. முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்
மதத்தின் பெயரால் உணர்வுகளை தூண்டினால் அவரிடம் கவனமாக இருக்க வேண்டும்... கிறிஸ்தவ விழாவில் ஸ்டாலின் பாவ எச்சரிக்கை..!