டிடிவி சுற்றுப்பயணம் மேற்கொள்வதில் தவறில்லை... - அமைச்சர் கடம்பூர் ராஜு சூசகம்...

First Published Aug 4, 2017, 7:38 PM IST
Highlights
minister kadampur raju says ttv dinakarn travel no issue..


டிடிவி சுற்றுப்பயணம் மேற்கொள்வதில் தவறில்லை எனவும் ஆனால் எடப்பாடி தலைமையில் கட்சியும் ஆட்சியும் சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும் அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.

சசிகலா சொத்துகுவிப்பு வழக்கில் சிறைக்கு சென்றதும் துணை பொதுச்செயலாளராக டிடிவி தினகரன் பொறுபேற்றார்.ஆனால் முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்ட எடப்பாடிக்கும், டிடிவிக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவியதாகதெரிகிறது.

இதையடுத்து இரட்டை இலை பெற லஞ்சம் கொடுத்த விவகாரத்தில் சிறைக்கு சென்ற தினகரனை கட்சியில் இருந்துஒதுக்குவதாக எடப்பாடி தரப்பு தெரிவித்தது.

அதற்கு டிடிவி 60 நாட்கள் பொறுப்பேன் இரு அணிகளும் இணைய வேண்டும் இல்லையேல் மீண்டும் கட்சி பணிகளைஆற்ற தலைமை கழகம் வருவேன் என அறிவித்திருந்தார்.

ஆனால் அணிகள் இணையாததால் விரைவில் தலைமை கழகம் வருவேன் எனவும் அதற்கு முன்பு தமிழகம்முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்வேன் எனவும் டிடிவி தெரிவித்திருந்தார்.

அதன்படி சுற்றுப்பயண தேதியை குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து டிடிவி வெளியிட்டுள்ள அறிக்கையில், மாவட்டவாரியாக பொதுகூட்டங்கள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடபட்டுள்ளது.

மேலும், ஆகஸ்ட் 14 ஆம் தேதி மதுரை மேலூரில் தனது முதல் சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார் டிடிவி.

இந்நிலையில், டிடிவி சுற்றுப்பயணம் மேற்கொள்வதில் தவறில்லை எனவும் ஆனால் எடப்பாடி தலைமையில் கட்சியும் ஆட்சியும் சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும் அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். 

click me!