ஈழப்போர் நினைவேந்தல் நடத்த முயன்ற மே 17 இயக்கத்தினர் கைது...!! - மெரீனாவில் பரபரப்பு

 
Published : May 21, 2017, 04:21 PM ISTUpdated : Sep 19, 2018, 12:38 AM IST
ஈழப்போர் நினைவேந்தல் நடத்த முயன்ற மே 17 இயக்கத்தினர் கைது...!! - மெரீனாவில் பரபரப்பு

சுருக்கம்

may 17 members arrested in marina

மெரீனாவில் ஈழப்போர் நினைவேந்தல் நடத்த வந்த மே 17 இயக்கத்தினர் 10 க்கும் மேற்பட்டோரை போலீசார் செய்தனர்.

மெரீனா கடற்கரையில் கண்ணகி சிலைக்கு அருகில் இன்று மாலை தமிழீழப் படுகொலைக்கான நினைவேந்தல் என்ற பெயரில் நிகழ்வு ஒன்றை நடத்த மே 17 இயக்கத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர்.

இதற்கு காவல்துறை தரப்பில் இருந்து அனுமதி கிடையாது என்று கூறி அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

அதில், மெரீனாவில் 2003  ஆண்டில் இருந்து போராட்டம் நடத்தப்படுவதில்லை எனவும், சட்ட விதிகளை மீறி போராட்டம் நடத்துபவர்கள் கைது செய்யப்படுவார்கள் எனவும் தெரிவிக்கபட்டிருந்தது.

இதையடுத்து சென்னை மெரீனா கடற்கரையில் உழைப்பாளர் சிலையில் இருந்து கண்ணகி சிலை வரையுள்ள சர்வீஸ் சாலையில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் மெரீனா கடற்கரையில் 500 க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், மே 17 இயக்கத்தினர் அறிவித்தபடி போராட்டத்தை நடத்த மேரீனாவிற்கு படையெடுத்தனர். ஆனால் போராட்டத்தில் ஈடுபடும் முன்பே போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவுகிறது. 

PREV
click me!

Recommended Stories

சாலையில் சென்ற பெண் மீது மோதி! அடுத்த நொடியே கவிழ்ந்த ஆட்டோ! பயணிகள் நிலை என்ன? பதற வைக்கும் வீடியோ!
நடிகர் விஜய்யை விட அரசியல்வாதி விஜய் மிகவும் பவர்புல்லானவர்.. அருண்ராஜ் எச்சரிக்கை..!