“என்னமா யோசிக்கிறாய்ங்க….” டெபிட் கார்டு மூலம் மொய் – திருமண விழாவில் புதிய டெக்னிக்..!!

 
Published : Nov 15, 2016, 12:54 AM ISTUpdated : Sep 19, 2018, 01:33 AM IST
“என்னமா யோசிக்கிறாய்ங்க….” டெபிட் கார்டு மூலம் மொய் – திருமண விழாவில் புதிய டெக்னிக்..!!

சுருக்கம்

500, 1000 ரூபாய் செல்லாது என அறிவித்ததால், திருமண மண்டபங்களில் ஸ்வீப்பிங் மெஷினில் மொய் பணம் வசூலிக்கிறார்கள். “நம்மாளுங்க என்னம்மா யோசிக்கிறாய்ங்க….”

பிரதமர் மோடி, கடந்த 8ம் தேதி இரவு 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவித்தார். இதையடுத்து, அந்த பணத்தை வைத்திருந்த மக்கள், சில்லறையாக மாற்ற பல்வேறு கடைகளுக்கு படை எடுத்தனர்.

சிலர் பெட்ரோல் பங்க்குகளிலும், டாஸ்மாக் கடைகளிலும் மாற்றி கொண்டனர். ஆனாலும், அங்கேயே போதிய அளவுக்கு சில்லறை இல்லாததால், பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதையடுத்து நகைக்கடைகளுக்கு படையெடுக்க தொடங்கினர். இதையொட்டி அன்று இரவு முழுவதும் நகைக்கடைகளில் கூட்டம் அலை மோதியது.

இதைதொடர்ந்து, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து சென்னையில் ஏராளமானோர் தங்கி வேலை செய்கின்றனர். இதில் பெரும்பாலானோர் மேன்ஷன்களில் தங்கியுள்ளனர். இவர்களிடம் பணம் ஆயிரக்கணக்கில் இருந்தாலும், அவர்களுக்கு சாப்பிட பணம் இல்லை.

நள்ளிரவு 12 மணிக்குள் கையிலுள்ள பணத்தை மாற்றியாக வேண்டும் என்பதால் பலரும் பரபரத்தனர். இந்த செய்தி பரவியதும் டீ கடைகள், மளிகை கடைகள், டிபார்ட்மென்டல் ஸ்டோர் ஆகியவற்றில் புகுந்து பொருட்களை வாங்கினர். இதனால், நூறு ரூபாய் நோட்டுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

அதே வேளையில் 9ம் தேதி முகூர்த்த நாள் என்பதால் திருமண மண்டபங்களில், 8ம் தேதி இரவு வரவேற்பு நிகழ்ச்சிகள் நடந்தன.

இதில் கலந்து கொள்ள வந்தவர்கள் பலரும், பிரதமரின் அறிவிப்பை கேட்டு பதற்றம் அடைந்தனர். ஆனால் புத்திசாலிதனமாக மொய் கவரில் ரூ.500, ரூ.1,000 நோட்டுக்களை ஓசைப்படாமல் வைத்து கொடுத்துவிட்டனர். மொய் பணம் வாங்குபவர்களிடமும் பணம் மாற்றுவதற்கு ஒரு கூட்டம் முண்டியடித்தது.

ரூ.100, ரூ.200 மொய் எழுதுபவர்கள் சிலர், தங்கள் நண்பர்களோடு சேர்ந்து ஒரே கவரில் பெயர்களை எழுதி மொய் கவர் கொடுத்ததையும் காண முடிந்தது.

இதனால் திருமணம் நடத்துபவர்களுக்கு கூடுதல் வருமானம் என்றாலும், அந்த பணம் கையில் கிடைத்தும் அனுபவிக்க முடியாத சோகத்தையும் ஏற்படுத்திவிட்டது. இதனால் மொய் பணத்தை வைத்து மண்டப வாடகை உள்ளிட்ட செலவுகளை ஈடுகட்ட நினைத்தவர்கள் அதிர்ச்சியும் சோகமும் அடைந்தனர்.

இந்நிலையில் தென் மாவட்டத்தில் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சியில், அனைத்து கார்டுகளும் ஏற்று கொள்ளப்படும் என ஒரு போர்டை வைத்து இருந்தனர். அருகில் சென்று பார்த்தபோது, மொய் பணத்துக்கு பதிலாக, திருமணத்துக்கு வந்தவர்களின் டெபிட் கார்டுகளை ஸ்வீப் செய்து கொண்டு இருந்தனர்.

இதுபற்றி அங்கிருந்தவர்களிடம் கேட்டபோது, “நம்ம கவர்மென்ட்டு, திடீர்ன்னு 500, 1000 ரூபாயை ஓரங்கட்டிடுச்சு. இப்ப கல்யாணத்துக்கு வர்றவங்க, எந்த கிஃப்ட்டும் வாங்க முடியல. மொய் எழுத சில்லறைக்கு அலைய வேண்டி இருக்கு. அதான், சின்ன ஐடியா தோனுச்சி, உடனே ஏற்பாடு பன்னிட்டோம். இப்ப யாருக்கும் எந்த சிரமமும் இருக்காது பாருங்க…” என்றனர்.

ஆனாலும், நம்மாளுங்க “என்னம்மா யோசிக்கிறாய்ங்க….” நடத்துக்குங்க நடத்துங்க என கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டோம்.

PREV
click me!

Recommended Stories

நம்பிக்கை வாக்கெடுப்பில் முதுகில் குத்திய திமுகவினர்..! முக்கிய விக்கட்டை தூக்கிய எடப்பாடி..! ஸ்டாலின் அதிர்ச்சி
புதிய பொறுப்பாளர்கள் நியமித்து அதிரடி.. தமிழ்நாடு அரசியலில் பாஜக அதிரடி மூவ்!