நடுரோட்டில் லாரி கவிழ்ந்து விபத்து - அண்ணா சாலையில் பரபரப்பு

 
Published : May 18, 2017, 06:53 PM ISTUpdated : Sep 19, 2018, 12:37 AM IST
நடுரோட்டில் லாரி கவிழ்ந்து விபத்து - அண்ணா சாலையில் பரபரப்பு

சுருக்கம்

Lorry collapses at Anna salai

தனியார் லாரி ஒன்று பழைய பேப்பர்களை ஏற்றிக் கொண்டு சென்னை அண்ணா சாலை வழியாக சென்ட்ரல் நோக்கி சென்றது. அரசு பல்நோக்கு மருத்துவமனை அருகே சென்றபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த அந்தலாரி திடீரென சாலையில் கவிழ்ந்தது.

இதனால், லாரியில் இருந்து அனைத்து பேப்பர் பண்டல்களும் பிரிந்து சாலையில் விழுந்தன. இதனால், லாரியின் பின்னால் வந்த வானங்கள் ஆங்காங்கே அப்படியே நின்றுவிட்டன.

 தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று சாலையில் மலைபோல் குவிந்து கிடந்த காகிதப் பண்டல்களை ஜே.சி.பி.இயந்திரம் மூலம் அப்புறப்படுத்தினர்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது ஓட்டுநரின் தவறே விபத்துக்கான காரணம் என்பது கண்டறியப்பட்டது. போக்குவரத்து நெரிசல் மிகுந்த அண்ணாசாலையில் லாரி திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

 

PREV
click me!

Recommended Stories

நாளையே திமுக என்னை தூக்கிப்போட்டாலும் கவலையில்லை..! மதுரையில் 'கெத்து' காட்டிய திருமாவளவன்!
2026 புத்தாண்டு கொண்டாட்டம்.. தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு!