“நாடா” புயல் எச்சரிக்கை – 5 மாவட்டங்களுக்கு பள்ளிகள் விடுமுறை

Asianet News Tamil  
Published : Nov 30, 2016, 05:41 PM ISTUpdated : Sep 19, 2018, 02:20 AM IST
“நாடா” புயல் எச்சரிக்கை – 5 மாவட்டங்களுக்கு பள்ளிகள் விடுமுறை

சுருக்கம்

நாடா புயல் காரணமாக 5 கடலோர மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும், நாளையும், நாளை மறுநாளும் விடுமுறை அளித்துபள்ளிக்கல்விதுறை அறிவித்துள்ளது.

வங்க கடலில் உருவாகியுள்ள, ‛நாடா' புயல் டிசம்பர் 2ம் தேதி புதுச்சேரி மற்றும் வேதாரண்யம் இடையே, கடலூர் அருகே கரையை கடக்கும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. 

இதனால், சென்னையில் நாளை அதிகாலை முதல் மழை பெய்ய துவங்கும். பின், படிப்படியாக அதன் தீவிரம் அதிகரிக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் பொதுமக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.

எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், நாகை, விழுப்புரம் ஆகிய 5 கடலோர மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளிகள்  நாளையும், நாளை மறுநாளும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

PREV
click me!

Recommended Stories

குமரிக்கடல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. எந்தெந்த மாவட்டங்களில் மழை போட்டுதாக்கப்போகுது?
விஜய் வைத்த பொறியில் சிக்கிய காங்கிரஸ்... ராகுல் அந்தர் பல்டி? அதிர்ச்சியில் ஸ்டாலின்..!