கார் விபத்தில் தமிழகத்தை சேர்ந்த 4 பேர் பலி...! - ஆந்திராவில் பரிதாபம்...

 
Published : Oct 13, 2017, 06:42 PM ISTUpdated : Sep 19, 2018, 01:18 AM IST
கார் விபத்தில் தமிழகத்தை சேர்ந்த 4 பேர் பலி...! - ஆந்திராவில் பரிதாபம்...

சுருக்கம்

Larry crash on the car near Kalahasti in Andhra Pradesh has caused a tragedy that killed four people.

ஆந்திர மாநிலம் காளஹஸ்தி அருகே கார் மீது லாரி மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழகத்தை சேர்ந்த வேலூர் மாவட்டத்தில் இருந்து 4 பேர் ஆந்திர மாநிலம் காளகஸ்திக்கு டூர் சென்றுள்ளனர். 

இதையடுத்து சுற்றுலாவை முடித்துவிட்டு இன்று மாலை காரில் 4 பேரும் தமிழகம் திரும்பியுள்ளனர். 

அப்போது எதிரே வந்த லாரியில் கார் மோதி விபத்திற்குள்ளானது. இதில், காரில் சென்ற 4 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 

இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலறிந்து வந்த போலீசார் இறந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். 

PREV
click me!

Recommended Stories

நல்லகண்ணு மீண்டும் அரசு மருத்துவமனையில் அனுமதி.. உடல்நிலை எப்படி இருக்கு?
என்னை அந்த மாதிரி நினைக்காதீர்கள்.. நான் எந்த தவறும் செய்யவில்லை.. திருச்சி மக்களிடம் உருகிய கே.என்.நேரு!