மதுரை சிறையில் கைதி மரணம் - காவல் நிலையத்தை முற்றுகையிட்ட உறவினர்கள்...

 
Published : Jul 26, 2017, 02:43 PM ISTUpdated : Sep 19, 2018, 12:56 AM IST
மதுரை சிறையில் கைதி மரணம் - காவல் நிலையத்தை முற்றுகையிட்ட உறவினர்கள்...

சுருக்கம்

Kudakadasamy who was detained at the Madurai Central Jail was killed by his relatives at the Karimedu police station claiming that there was a mystery of the prisoners death.

மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த கருப்பச்சாமி என்ற விசாரணை கைதி மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி அவரது உறவினர்கள் கரிமேடு காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

தேனி மாவட்டம் ராஜதானியை சேர்ந்தவர் கருப்பசாமி. இவரது ஊரில் நடைபெற்ற அடிதடி சண்டை வழக்கில் கருப்பசாமியை கைது செய்து மதுரை மத்திய சிறையில் போலீசார் அடைத்தனர்.

இந்நிலையில் அவர் உயிரிழந்து விட்டதாக உறவினர்களுக்கு இன்று தகவல் தெரிவித்தனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் கருப்பாசாமியின் மரணத்தில் மர்மம் உள்ளதாக கூறி சிறை அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டுமென்று கரிமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

சிறை அதிகாரிகளுக்கு எதிரான புகாரை கரிமேடு காவல்துறையினர் வாங்க மறுப்பு தெரிவித்ததாக தெரிகிறது.

இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் கரிமேடு காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். இதனால் அந்தப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.

PREV
click me!

Recommended Stories

தற்குறி.. ஒத்தைக்கு ஒத்தை வாடா.... தரை லோக்கலா அடித்து கொள்ளும் சாட்டை - நாஞ்சில் சம்பத்
50 தொகுதிகளை கேட்டு அடம் பிடிக்கும் பாஜக.. முப்பதே ஓவர்.. கறார் காட்டும் எடப்பாடி..!