காஞ்சி சங்கராச்சாரியாருக்கு திடீர் மூச்சுத்திணறல் …. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் பரபரப்பு….

Asianet News Tamil  
Published : Feb 28, 2018, 09:03 AM ISTUpdated : Sep 19, 2018, 02:00 AM IST
காஞ்சி சங்கராச்சாரியாருக்கு திடீர் மூச்சுத்திணறல் …. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் பரபரப்பு….

சுருக்கம்

kanji sankarachariyar admitted ih hospital

காஞ்சிபுரம் சங்கர மடம் சங்கராச்சாரியார் ஜெயேந்தி சரஸ்வதி சுவாமிகள் திடீர் மூச்சுத் திணறல் காரணமாக காஞ்சி அருகே உள்ள தனியார் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.அவருக்கு மாரடைப்பு  ஏற்பட்டிருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

காஞ்சி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட திடீர் மூச்சுத் திணறல் காரணமாக சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். இதையடுத்து அவர் காஞ்சி மடத்தில் ஓய்வெடுத்து வந்தார்.

இந்நிலையில் இன்று காலை  அவருக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதையடுத்து அவர் உடனடியாக காஞ்சிபுரம் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக  அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு லேசான மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாகவும், உடனடியாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தேவைப்பட்டால் வேறு மருத்துமனைக்கு அவர் மாற்றப்படுவார் என்றும் காஞ்சி மட தகவல்கள் தெரிவிக்கின்றன.

சங்கராச்சாரியார் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து அங்கு எராளமான பக்தர்கள் குவிந்துள்ளனர்.

PREV
click me!

Recommended Stories

தேமுதிக அலுவலகத்தில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது
தூத்துக்குடி 12ம் வகுப்பு பள்ளி மாணவி கொலை வழக்கு! பிரேத பரிசோதனையில் அதிர்ச்சி.! கேட்டதும் கதறும் தந்தை!