கனிமொழியின் தாய் ராசாத்தி அம்மாளுக்கு என்னாச்சு? திடீரென மருத்துவமனையில் அனுமதி!

Published : Oct 16, 2025, 04:31 PM IST
tamilnadu

சுருக்கம்

திமுக எம்.பி கனிமொழியின் தாய் ராசாத்தி அம்மாள் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை குறித்து மருத்துவர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மனைவி ராசாத்தி அம்மாள். இவர் தனது மகளும், திமுக துணை பொதுச்செயலாளரும், எம்.பி.யுமான கனிமொழியுடன் சென்னை சிஐடி காலனியில் வசித்து வருகிறார். ராசாத்தி அம்மாளுக்கு சமீப காலமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

ராசாத்தி அம்மாள் மருத்துவமனையில் அனுமதி

அதாவது அஜீரண கோளாறு மற்றும் வயிற்று வலியால் பாதிக்கப்பட்டு வந்த அவர் இதற்காக ஜெர்மனியில் உள்ள பிரபலமான மருத்துவமனையில் 20 நாட்கள் சிகிச்சை பெற்று சென்னை திரும்பியிருந்தார். இந்நிலையில், சென்னையில் உள்ள வீட்டில் இருந்த ராஜாத்தி அம்மாளுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

உடல்நிலை எப்படி இருக்கு?

இதன் காரணமாக அவர் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். வயது மூப்பு காரணமாக ராசாத்தி அம்மாள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதாகவும், சிகிச்சைக்கு பின்பு அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

அட! 2026 தேர்தலுக்கு இப்போதே ரெடி! நாம் தமிழர் கட்சியின் 100 வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட சீமான்!
விடாது கருப்பு..! துவண்டு கிடந்த ஓ.பி.எஸுக்கு துணிச்சல் கொடுத்த அமித் ஷா..! அதிமுவில் மீண்டும் அதிகார ஆடுபுலி ஆட்டம்..!