கல்யாண மண்டபத்தில் கைவரிசை காட்டிய களவாணி கும்பல் – மணப்பெண்ணின் 60 சவரன் நகை திருட்டு...

 
Published : May 29, 2017, 12:40 PM ISTUpdated : Sep 19, 2018, 12:40 AM IST
கல்யாண மண்டபத்தில் கைவரிசை காட்டிய களவாணி கும்பல் – மணப்பெண்ணின் 60 சவரன் நகை திருட்டு...

சுருக்கம்

Jewelry theft in marriage hall

அரக்கோணம் அருகே திருமணத்திற்காக கல்யாண மண்டபத்தில் வைத்திருந்த மணப்பெண்ணின் 60 சவரன் நகை திருட்டு போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரக்கோணம் அடுத்த சோளிங்கரில் திருமண மண்டபம் ஒன்று உள்ளது. இங்கு இன்று காலை திருமணம் ஒன்று நடக்க இருந்த நிலையில் மாப்பிள்ளை வீட்டாரும் மணப்பெண் வீட்டாரும் திருமண மண்பத்தில் கூடினர்.

அங்கு மணப்பெண்ணிற்கு அலங்காரம் நடைபெற்று கொண்டிருந்தது. அப்போது பெண்ணிற்கு அணிய வைத்திருந்த 60 சவரன் நகையை மர்ம நபர்கள் சிலர் திருடியிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து பெண் வீட்டார் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து வந்த போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் திருமண மண்பத்திற்கு வந்த அனைவரிடமும் போலீசார் சோதனை மேற்கொண்டனர். திருமணம் மண்டபத்திலேயே சிலர் நகையை திருடிய சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

PREV
click me!

Recommended Stories

மளமளவென பற்றி எரிந்த எல்ஐசி அலுவலகம்! பெண் மேலாளர் பலியானது எப்படி? பரபரப்பு தகவல்
அரசு வேலை வேண்டுமா.! இனி ஒரு ரூபாய் செலவு இல்லை.! தமிழக அரசின் ஜாக்பாட் அறிவிப்பு!